Tuesday, October 30, 2012

இஜ்திஹாத் - الإجتهاد

இஜ்திஹாத் - الإجتهاد
இஜ்திஹாத் என்றால் என்ன?
மொழிக் கருத்து: இஜ்திஹாத் என்பது ஜஹ்த் - கஷ்டப்படுதல், ஜுஹ்த் - முயற்சி செய்தல் என்பவற்றிலிருந்து தோன்றியது. முழு முயற்சியையும் செலவிடுதல் என்பது இஜ்திஹாத் என்பது குறிக்கும்.
இஸ்லாமிய வழக்கில்: குர்ஆன், ஸுன்னாவில் நேரடியாகத் தீர்வு காணப்படாத ஒரு பிரச்சினைக்கு ஓர் இஸ்லாமிய சட்டவறிஞர் ஷரீஆ மூலாதாரங்களையும் சட்டவாக்க வழிமுறைகளையும் பின்பற்றி தீர்வு காண முற்படுதல் இஜ்திஹாத் எனப்படும்.
இப்பணி ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இடம்பெற்று வந்துள்ளது.

இஜ்திஹாதுக்கான ஆதாரங்கள்
குர்ஆன்    'அவர்கள் அதனை (பிரச்சினையை) தூதரிடமோ, அவர்களிலுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களில் அதை ஊகித்து அறியக் கூடியவர்கள் அதை நன்கு விசாரித்துக்கொள்வார்கள்' (4:83)
'அன்றியும் தம் காரியங்களை தம்மிடமே கலந்தாலோசித்துக் கொள்வர்' (42:38)

ஸுன்னா    'தீர்ப்பு சொல்பவர் இஜ்திஹாத் செய்து அது சரியாக அமைந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவர் இஜ்திஹாத் செய்து அது தவறாக அமைந்தால் அவருக்கு ஒரு கூலி உண்டு' (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பி வைக்கும் போது குர்ஆனிலோ, ஹதீஸிலோ தீர்வு காணப்படாத ஒரு பிரச்சினையை எவ்வாறு எதிர்கொள்வீர் என வினவப்பட்டபோது, முஆத் (ரழி) அவர்கள் என் அறிவுக்குட்பட்ட வரை இஜ்திஹாத் செய்து தீர்வு சொல்வேன் என்றார்கள். இதனை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்து பிரார்த்தித்தார்கள்.

பனூ குறைழாவில் வைத்தே அஸர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என நபி (ஸல்)அவர்கள் சில ஸஹாபாக்களைப் பணித்த சம்பவம். இதிலே நபி(ஸல்)அவர்கள் இரு குழுக்களினதும் முடிவை அங்கீகரித்தமை.

இஜ்மாஃ    எல்லா மத்ஹப்களும் இஜ்திஹாதை சட்ட மூலாதாரமாக ஏற்றுக்கொண்டுள்ளன. அவை இவ்விடயத்தில்  ஏகோபித்த முடிவைக் கொண்டுள்ளன.

பகுத்தறிவு    குர்ஆனில் பல கருத்துக்கிடம்பாடான பல விடயங்கள் உள்ளதால் அவற்றுள் ஒரு கருத்தைத் தெரிவு செய்யவேண்டிய தேவை உள்ளமை.

தீர்வு சொல்லப்படாத புதிய பிரச்சினைகளுக்கு பிரதான சட்ட மூலாதாரங்கள் அடிப்படையில் இஜ்திஹாத் செய்து முடிவு செய்ய வேண்டியுள்ளமை.

இஜ்திஹாதின் எல்லை
குர்ஆன், ஸுன்னா தெளிவாக, திட்டவட்டமாகத் தீர்வு சொன்ன விடயங்ளில் இஜ்திஹாத் இடம்பெற முடியாது.
உம்: அகீதா, இபாதா, ஹுதூத், கப்பாறா, அக்லாக்...
இவ்வகையில் இஜ்திஹாத் பின்வரும் பகுதிகளில் இடம்பெறும்.
1.    பல கருத்துக்கு இடம்பாடான வசனங்கள். (உம்: தயம்முமில் صعيد எனும் சொல்)
2.    சட்ட வசனங்கள் (நஸ்) இடம்பெறாத புதிய பிரச்சினைகள் (உம்: பரிசோதனைக் குழாய்க் குழந்தை)

இஜ்திஹாதின் வகைகள்
இஜ்திஹாத் ஜுஸ்ஈ الإجتهاد الجزئي   
•    ஒரு குறிப்பிட்ட துறையில் மாத்திரம் இஜ்திஹாத் செய்ய ஆற்றல் கொண்ட ஒரு முஜ்தஹிதின் தீர்ப்பு.
•    உம்: வங்கியியல் , தனியார் சட்டம்..  
 இஜ்திஹாத் குல்லி الإجتهاد الكلي
•    அனைத்து துறைகளிலும் இஜ்திஹாத செய்யும் ஆற்றல் கொண்ட ஒரு முஜ்தஹிதின் தீர்ப்பு.
•    இவர் ஒரு துறையில் அன்றி சகல துறைகளிலும் இஜ்திஹாத் செய்வார். (முஆமலாத், முனாகஹாத்..)

ஒரு முஜ்தஹிதுக்கான தகுதிகள்
1.    முஸ்லிமாக, பருவவயதடைந்தவராக இருத்தல்
2.    அல் குர்ஆன் பற்றிய ஆழமான அறிவு. (ஸபபுன் நுஸூல், மக்கி மதனி,
       நஸ்க், முஹ்கம், முதஷாபிஹ்..)
3.    அஸ் ஸுன்னா பற்றிய ஆழமான அறிவு. (உஸூலுல் ஹதீஸ், 
       முஸ்தலஹுல் ஹதீஸ், அஸ்பாபு வுரூதில் ஹதீஸ்...)
4.    முன்னைய இஜ்மாஃ பற்றிய அறிவு. (அல் இஜ்மா: இப்னுல் முன்திர்,
       மராதிபுல் இஜ்மா: இப்னு ஹஸ்ம்..)
5.    அறபு மொழிப் புலமை. (இலக்கணம், இலக்கியம், அணியிலக்கணம்..)
6.    உஸூலுல் பிக்ஹ் பற்றிய அறிவு. (சட்டவாக்க முறைகள், சட்ட விதிகள்..)
7.    ஷரீஆவின் நோக்கங்கள் ( الشريعةمقاصد(   பற்றிய தெளிவு. (நல்லவை சேரல்,
      தீயவை தவிர்த்தல்.)
8.    சமகால உலகு, மக்கள், சூழ்நிலைகள் பற்றிய அறிவு.
9.    தக்வா, நீதி, நேர்மை இருத்தல்.

குர்ஆனும் தனி மனித உருவாக்கமும்

தனி மனித உருவாக்கத்தில் குர்ஆனின் பங்கு.
01) ஒவ்வொரு தனிமனிதனும் குர்ஆனையே முழு முதல் வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும் என அது கூறுகின்றது.
மனிதன் இயல்பிலேயே குறையறிவு கொண்டவனாக இருக்கின்றான். அவனுக்கு இறைவழிகாட்டல் என்றும் இன்றியமையாதது. அது அவனது ஆன்மீக, லௌகீக வாழ்வுக்கு வழிகாட்டுகின்றது. குர்ஆன் முஃமின்களின் வழிகாட்டி என்பது குர்ஆனின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
02) மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும் என குர்ஆன் பணிக்கின்றது.
இவை ق الله حقو   எனப்படுகின்றன. தொழுகை, நோன்பு, திக்ர், குர்ஆன் ஓதல் என பல விடயங்கள் இதில் அடங்குகின்றன. இவற்றின் மூலம் மனிதன் ஆன்மீக ரீதியான பலத்தைப் பெற்றுக்கொள்கின்றான்.
03) மனிதன் மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முறையாகச் செய்யுமாறு குர்ஆன் பணிக்கின்றது.
இக்கடமைகள் حقوق العباد    எனப்படுகின்றன. பெற்றோரை மதித்தல், உறவுகளைப் பேணல், அயலாரை நேசித்தல் என நிறைய விடயங்கள் இதில் அடங்குகின்றன. தாய் தந்தையருக்கு சீ என்று கூடக் கூறக் கூடாது எனக் குர்ஆன் கூறுகின்றது. (17:24)
ஸஹாபாக்கள் இவ்விரு கடமைகளிலும் சமநிலை பேணியுள்ளார்கள். இதனால் தான் அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டார்கள்;:
'இரவிலே துறவிகளாகவும் பகலிலே குதிரைவீரர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்'
04) தன்னையும் தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தையும் நேர்வழிப்படுத்துவது தனிமனிதனின் பொறுப்பு என்கின்றது.
இதனால் தான் குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
'நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்..'(66:6)
05) தனிமனிதனுக்கான சிறந்த ஒழுக்கப் பண்பாடுகளை குர்ஆன் போதிக்கின்றது.
அல்லாஹ்வின் அடியார்களின் பண்புகள் பற்றிக் குறிப்பிடும்போது குர்ஆன்,
அவர்கள் அறிவீனர்கள் பேசினால் ஸலாம் கூறி ஒதுங்கிச் சென்றுவிடுவார்கள் என்கின்றது