Tuesday, October 30, 2012

குர்ஆனும் தனி மனித உருவாக்கமும்

தனி மனித உருவாக்கத்தில் குர்ஆனின் பங்கு.
01) ஒவ்வொரு தனிமனிதனும் குர்ஆனையே முழு முதல் வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும் என அது கூறுகின்றது.
மனிதன் இயல்பிலேயே குறையறிவு கொண்டவனாக இருக்கின்றான். அவனுக்கு இறைவழிகாட்டல் என்றும் இன்றியமையாதது. அது அவனது ஆன்மீக, லௌகீக வாழ்வுக்கு வழிகாட்டுகின்றது. குர்ஆன் முஃமின்களின் வழிகாட்டி என்பது குர்ஆனின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
02) மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும் என குர்ஆன் பணிக்கின்றது.
இவை ق الله حقو   எனப்படுகின்றன. தொழுகை, நோன்பு, திக்ர், குர்ஆன் ஓதல் என பல விடயங்கள் இதில் அடங்குகின்றன. இவற்றின் மூலம் மனிதன் ஆன்மீக ரீதியான பலத்தைப் பெற்றுக்கொள்கின்றான்.
03) மனிதன் மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முறையாகச் செய்யுமாறு குர்ஆன் பணிக்கின்றது.
இக்கடமைகள் حقوق العباد    எனப்படுகின்றன. பெற்றோரை மதித்தல், உறவுகளைப் பேணல், அயலாரை நேசித்தல் என நிறைய விடயங்கள் இதில் அடங்குகின்றன. தாய் தந்தையருக்கு சீ என்று கூடக் கூறக் கூடாது எனக் குர்ஆன் கூறுகின்றது. (17:24)
ஸஹாபாக்கள் இவ்விரு கடமைகளிலும் சமநிலை பேணியுள்ளார்கள். இதனால் தான் அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டார்கள்;:
'இரவிலே துறவிகளாகவும் பகலிலே குதிரைவீரர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்'
04) தன்னையும் தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தையும் நேர்வழிப்படுத்துவது தனிமனிதனின் பொறுப்பு என்கின்றது.
இதனால் தான் குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
'நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்..'(66:6)
05) தனிமனிதனுக்கான சிறந்த ஒழுக்கப் பண்பாடுகளை குர்ஆன் போதிக்கின்றது.
அல்லாஹ்வின் அடியார்களின் பண்புகள் பற்றிக் குறிப்பிடும்போது குர்ஆன்,
அவர்கள் அறிவீனர்கள் பேசினால் ஸலாம் கூறி ஒதுங்கிச் சென்றுவிடுவார்கள் என்கின்றது

No comments:

Post a Comment