Tuesday, July 26, 2011

உங்கள் சிந்தனைக்கு

சிந்தனைகள்
1. புகழும் போது பகிரங்கமாகப் புகழ். தூற்றும் பொழுது தனியே தூற்று. ஒருவர் நல்லதொரு செயல் செய்துவிட்டால் பலர் பேர் முன்னிலையில் மனந்திறந்து பாராட்டவேண்டும். அதேநேரம் ஒருவர் தவறு செய்துவிட்டால் அதனை எல்லோர் முன்னிலையிலும் பகிரங்கப்படுத்தி அவரை அவமானப்படுத்தாமல் தனியே சுட்டிக்காட்ட வேண்டும். ஒருவரது குறையை பல பேர் முன்னிலையில் எடுத்துச்சொல்வதால் அவர் திருந்தமாட்டார். அவர் அதனால் பாதிக்கப்பட்டு மென்மேலும் தவறுசெய்ய முற்படுவார். அதேபோன்று நாம் மற்றவர்களது சாதனைகளை, வெற்றிகளை மனந்திறந்து பாராட்ட வேண்டும். பொறாமைப்படக் கூடாது. இது பெரிய,  பண்பட்ட  உள்ளங்களால் மட்டுமே முடியும்.

2. நேற்று என்பது காலாவதியான காசோலையாகும்.
நாளை என்பது திகதியிடப்பட்ட காசோலையாகும்.
இன்று என்பது கையிலுள்ள காசாகும். அதனை நீ பயன்படுத்திக்கொள்.
நேற்றை நினைத்துக் கவலைப்படுவதும் நாளை நடக்கப்போவதை நினைத்து அவதிப்படுவதும் புத்திசாலித்தனமாகாது. இன்றைய நாட்களை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுத்தி வெற்றிபெற முயற்சிக்க வேண்டும். நேற்று என்பது மரணித்துவிட்ட ஒன்று . நாளை என்பது இன்னமும் பிறக்காத ஒன்று. இன்று மட்டுமே எங்கள் கைவசம் உள்ளது. அதனைத் திட்டமிட்டுக் கழிப்பதால்தான் விமோசனம் கிடைக்கும்.

3. நாம் எவ்வளவு காலம் வாழ்வது என்பது முக்கியமல்ல. எப்படி வாழ்கின்றௌம் என்பது தான் முக்கியம்.
ஒருவர் எத்தனை வருடங்கள் வாழ்ந்தார் என்பது சாதனையல்ல. தன் வாழ்நாளில் எதனையெல்லாம் சாதித்தார் என்பதுதான் சாதனையாகும். நாம் பிறருக்காக வாழும்போது ஒரு கொள்கைக்காக வாழும் போதுதான் எமது வாழ்வு அர்த்தமுள்ளதாகின்றது. எமக்காகவும் எமது குடும்பத்துக்காகவும் மட்டும் வாழ்ந்தவர்களை வரலாறு வாழ்ந்தவர்கள் என்று வரவு வைப்பதில்லை. எனவே நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக எதையேனும் உலகில் சாதித்துவிட்டுச் செல்ல வேண்டும்.

4. மதம் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. அது நடத்தையாகும்.
மதம் என்பது வெறும் நம்பிக்கைகள் மட்டுமல்ல. அது எமது வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபளிக்க வேண்டும். செயற்பாடுகளில் மதப் போதனைகள் வெளிப்படவேண்டும். இல்லாதபோது மதம் என்பது கோசமாக மட்டுமே அமையும். நல்ல நடத்தைகளோ முன்மாதிரியான பழக்கவழக்கங்களோ இல்லாதவரிடத்தில் மதம் என்பது போலியாகவே இருக்கும்.

5. தேவைகள் குறைந்தவன்தான் செல்வந்தனாவான்.
அதிக பணத்தை சம்பாதிப்பவன் செல்வந்தன் அல்லன். பணக்காரன் கூட தேவைகள் அதிகரிக்கும்போது ஏழையாகின்றான். அதேவேளை ஓர் ஏழை கூட தேவைகளைக் குறைத்துக்கொள்ளும் போது செல்வந்தன் ஆகின்றான். ஆகவே ஆசைகளைக் குறைத்துக்கொள்ளும் போது மனிதன் செல்வந்தனாகின்றான் நிம்மதி பெறுகின்றான். இதனால் தான் உளத்திருப்திதான் ஒருவனிடமுள்ள உண்மையான செல்வம் என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6. அறிவில் மிகச் சிறந்தது உன்னை நீ அறிந்துகொள்வதே.
ஒவ்வொருவரும் தான் யார்  தனக்குள்ள ஆற்றல்கள் என்ன, திறமைகள் என்ன, பலவீனங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதே மிக மிக முக்கியமானதாகும். மற்றவர்களைப் பற்றி அறிவதை விட தன்னைப் பற்றிச் சரியாக அறிவதுதான் மிகக் கடினமானது என்பார்கள். தன்னை அறிந்தவனால் தான் பல விடயங்களை இலகுவில் சாதிக்க முடியும்.  வெற்றிபெறவும் முடியும்.

7. தற்புகழ்ச்சி என்பது ஒருவனுக்கான பரிந்துரை ஆகாது.
ஒருவர் தன்னைப் பற்றிப் புகழ்ந்துரைப்பதை யாரும் நம்பமாட்டார்கள். இது நாகரிகமான செயல் அல்ல. புகழ் என்பது மற்றவர்கள் மூலம் பரப்பப்படவேண்டும். பூக்களின் வாசனையைக் காற்றுதான் பரப்புகின்றது. பூக்கள் ஒருபோதும் பரப்புவதில்லை என்கிறார் கவிஞர் வைரமுத்து.  தன்னைப் பற்றி அதிகம் புகழ்பவர்கள் மற்றவர்களால் வெறுக்கப்படுகிறார்கள். விற்காத பொருளுக்குத்தான் விளம்பரம் செய்வார்கள். இதுபோன்றுதான் சமூகத்தில் எடுபடாதவர்கள் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு தமக்கெனதொரு இடத்தைத் தேட முயற்சிப்பார்கள். தற்புகழ்ச்சி பாடுபவர்களை இறைவன் கூட வெறுக்கின்றான்.

8. வெற்றி என்பது பல தோல்விகளின் பின் வருவதாகும்.
முதல் முயற்சி எப்போதும் வெற்றியைத் தருவதில்லை. ஒரு வெற்றிக்குப் பின்னால் பல தோல்விகள் இருந்துள்ளதை நாம் வரலாற்றிலே கற்றுக்கொள்கின்றௌம். எனவே நாம் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடக் கூடாது. ஒவ்வொரு தோல்வியும் வெற்றிக்கான பாடமும் படிப்பினையுமாகும். தோல்விகளால் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு வெற்றியை நோக்கித் தளர்வடையாமல் பயணிப்பவனே புத்திசாளியாவான்.
9. நான் வாழ்வதற்கு என் தந்தைக்குக் கடமைப்பட்டுள்ளேன். நான் நன்றாக வாழ்வதற்கு எனது ஆசிரியருக்குக் கடமைப்பட்டுள்ளேன்.
இது உலகின் பல பகுதிகளை ஆட்சிசெய்த மாமன்னன் மகா அலக்ஸாண்டருடைய வாக்கு. ஒவ்வொரு மனிதனுடைய எதிர்கால வெற்றியிலும் ஆசிரியர்கள் பங்கெடுக்கின்றார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டலும்,  அர்ப்பணிப்பும் தாம் நல்ல தலைவர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன. இதனை யாரும் மறந்துவிடக் கூடாது. தமக்கு ஏணியாக நின்ற ஆசிரியர்களை எப்போதும் கண்ணியப்படுத்த வேண்டும். இதனால் தான் கலீபா அலி (ரழி) அவர்கள், எனக்கு ஒரே ஒரு எழுத்தைச் சொல்லித் தந்தாலும் அவருக்கு நாம் அடிமைபோல் இருப்பேன் என்றார்கள்.

10. உண்மை பொய்யை விட விசித்தரமானது.
பொய் சொல்வதை விட உண்மையைக் கூறும்போதுதான் மக்கள் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் பார்ப்பார்கள். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முன்வர மாட்டார்கள். அதனைச் சிலபோது கடுமையாக எதிர்ப்பார்கள். பொய் அதிக முழக்கத்துடன் ஒலிப்பதால் அது உண்மையாகாது. உண்மை மெதுவாக ஒலிப்பதால் அது பொய்யாகவும் மாட்டாது. நாம் உணர்ச்சிவசப்படாமல் அறிவைப் பயன்படுத்தி நிதானமாக நின்று எது உண்மை எது பொய் என்பதைத் தெரிந்து செயற்படல் வேண்டும்.


Monday, July 25, 2011

Useful Websites

Children’s websites



1.     www. appukids. com
2.     www. babygear. com
3.     www. cyberkids. com
4.     www. childuniya. com
5.     www. childsearch. org
6.     www. childquest. org
7.     www. Childsupport. org
8.     www. discoverykids. com
9.     www. gameproworld. com
10.                        www. ibaby . com
11.                        www. kidscom. com
12.                        www. kidpub. com
13.                        www. kidslovemystory. com
14.                        www. extremekids. com
15.                        www. tweentimes. com
16.                        www. wordcentral. com
17.                        www. wiped4kids. com
18.                        www. kidsmahal. com
19.                        www. youngeronline. com
20.                        www. kidsites. Com





Tamil websites


1.     www.tamilcyber.com
2.     www.tamilpages.com
3.     www.kamban.com
4.     www.ambalam.com
5.     www.tamilsongs.net
6.     www.kalanchiyam.com
7.     www.vikatan.com
8.     www.tamilossai.com
9.     www.thamila.com
10.                        www.tamilboard.com
11.                        www.tamilforum.com
12.                        www.tamil.com.
13.                        www.tamilcyber.com
14.                        www.tamil.net
15.                        www.tamileuropean.com
16.                        www.tamilworld.com
17.                        www.kanithamizh.org
18.                        www.tamilnews.org
19.                        www.tamilsoftware.org
20.                        www.tamizh.com
21.                        www.tamilmusic.com
22.                        www.murasu.com
23.                        www.tamilkalam.com
24.                        www.mukil.com
25.                        www.tamilcinema.com
26.                        www.vanavil.com





Websites on Books

1.     www.amazon.com
2.     www.authorsshop.com
3.     www.book-online.com
4.     www.booxop.com
5.     www.bibilomania.com
6.     www.esmarts.com
7.     www.fabmart.com
8.     www.powells.com
9.     www.shandgroup.com

Websites on Comics

2.     www.dragonfire.com
3.     www.disney.com
4.     www.comics.com
5.     www.fantasticon.com
6.     www.joecartoon.com
7.     www.shockwave.com
8.     www.superosity.com
9.     www.toonscape.com

Islamic Websites


1.     www.islamonline.com
2.     www.islam.com
3.     www.haroonyahya.com
4.     www.aljazeera.com
5.     www.tamilislam.com
6.     www.sydneymuslimyouth.com
7.     www.wamylanka.org
8.     www.impactintl.com
9.     www.almujtama.com
10.                        www.arabnews.com




Websites Of S.L & Indian Newspapers.

1.     www.ccom.lk/ virakesari
2.     www.thinakkural.com
3.     www.uthayan.com
4.     www.meelparvai.com
5.     www.suntimes.com
6.     www.island.com
7.     www.lakehouse.com
8.     www.geocities.com (India – Thinamalar)
9.     www.dinakaran.com (India)
10.                        www.thinaboomi.com (India)


Websites on Music

1.     www.yousufislam.com
2.     www.samiyousuf.com
3.     www.southindiamusic.com
4.     www.amused.com
5.     www.bollywoodmusic.com
6.     www.carnaticmusic.com
7.     www.musicworld4u.com
8.     www.sangeetham.com
9.     www.t.series.com
10.                        www.mtv.com
11.                        www.mp3.com

நிலாக் கவிதை

நிலவே நானும் உனைப் பாடுகிறேன்
நிலவோடு நடந்துகொண்டு
நிலவொளியில் நனைந்துகொண்டு
நிலவையே ரசித்துக்கொண்டு
நிலவுக்குத் தூதுவிட்டேன்
நிலவே
நீ எப்படி பெண்ணானாய்?
கவிதைக்குக் கருவானாய்?
பெண்மைக்கு ஒப்பானாய்?
அழகுக்கு நிகரானாய்?
பெண்ணாக உருவகிப்போர்
உனைப் பற்றித் தெரியவில்லை
அழகுக்கு அர்த்தம்சொல்வோர்
உனை ஒன்றும் அறியவில்லை.
உனது அழகெல்லாம்
தூரத்தில் இருப்பவர்க்கே
உனதருகில் வந்துவிட்டால்
காவேரியும் கதிகலங்கும்
உன் முகத்தின் குழிகளையோ
ஈரமில்லா நெஞ்சத்தையோ
சுவாசமில்லா இதயத்தையோ
பெண்மையென்று சொல்லலாமோ?
உந்தன் வெளிச்சம் ஒன்றும்
உன்னால் வந்ததல்ல
கதிரவனின் தயவால்
கடன்வாங்கிய எழிலன்றௌ?
உனைப் பற்றிக் கவிசொல்வோர்
உனை ஒன்றும் மெச்சவில்லை
உன் பெயரை சிலேடையாக்கி
உருவகிப்பர் வேறெதையோ.
உனைப்பார்த்து எனக்கொன்றும்
கிஞ்சிற்றும் பொறாமையில்லை
உனைப்பாட வந்தவர் பலர்
உருப்படியாய் சொல்லவில்லை.
நீ எமக்கு விளக்கானாய்
காலத்தின் கருவியானாய்
நம்பூமிக்கு துணையானாய்
மலர்களுக்கு நட்பானாய்.
கடலுக்கு எழுச்சியானாய்
அண்ணலுக்கு அற்புதமானாய்
இரவில் திரியும் உயிர்களுக்கு
இலவசமின் குமிழானாய்
நிலவே
உனைக் காணும் போதெல்லாம்
உனைப்படைத்த வல்லமையை
துதிக்காமல் இருப்பதற்கு
இறக்கவில்லை இதயமின்னும்.

ஹிசாம் ராஸிக்

கஹட்டோவிட்ட வரலாறு

கஹட்டோவிட்ட வரலாறு
மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள கிராமமே கஹட்டோவிட்ட. இது நிட்டம்புவ - வல்கம்முல்ல ஊடான கிரிந்திவல பாதையில் நிட்டம்புவ நகரில் இருந்து 8 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. கஹட்டோவிட்ட ஊடாக அத்தனகலு ஓயா ஓடுவது இதன் அழகுக்கும் பசுமைக்கும் இன்னும் வலிமை சேர்க்கின்றது. இலங்கையில் உள்ள முஸ்லிம்களை மாத்திரம் உள்ளடக்கிய வெகுசில ஊர்களில் இதுவும் ஒன்று. நாடளாவிய ரீதியில் கல்வி  உயர்அரச பதவிகள்  மார்க்க அனுஷ்டானங்கள், அரசியல் போன்ற பல்வேறு காரணிகளால் மிகவும் பிரபல்யமடைந்த ஊராக கஹட்டோவிட்ட காணப்படுகின்றது.
 கஹட்டோவிட்ட என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அவற்றில் மிகவும் பொருத்தமானதாக இதனைக் குறிப்பிடலாம். இந்த ஊரின் ஊடாகச் செல்லும் ஆற்றங்கரையில் அக்காலம் தேயிலைச் செடிகள் காணப்பட்டன. ஆற்றௌரம் என்பதற்கு சிங்களத்தில் ஒயிட்டி என்றும் தேயிலைக்கு கஹட்ட என்றும் வழங்குவதன் காரணமாகவே கஹட்டோவிட்ட என்ற பெயர் பெற்றதாகக் குறிப்பிடப்படுகின்றது. அண்மைக்காலம் வரை இவ்வூரின் சில பகுதிகளில் தேயிலைச் செடிகள் இருந்ததற்கான தக்க சான்றுகள் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கஹட்டோவிட்ட சுமார் 400 வருட வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட ஒரு புராதன கிராமம். கஹட்டோவிட்ட கிராமத்துக்கு முஸ்லிம்கள் எவ்வாறு எங்கிருந்து வந்தார்கள் என்பதற்கு இரு வகையான காரணங்கள் கூறப்படுகின்றன.
கிறிஸ்துக்கு முன்னரே அறேபியர் வர்த்தக நோக்கில் இலங்கைக்கு வந்துபோனதாக நிறைய சான்றுகள் உள்ளன. அத்துடன் கி.பி. 8ம் நூற்றாண்டுகளில் அறேபிய வம்சாவழியிலான முஸ்லிம் குடியேற்றங்கள் பேருவலை, காலி, அட்டுலுகம போன்றகரையோரப் பிரதேசங்களில் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இலங்கைக்கு ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் கரையோரங்களில் குடியேறிய முஸ்லிம்கள்  இலங்கையின் வர்த்தகத்தில் தனியான இடத்தைப் பெற்றிருந்தனர். ஆயினும் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது முஸ்லிம்களின் வர்த்தகத்தைத் திட்டமிட்டு அழித்து அவர்களை விரட்டிவிட்டு வர்த்தக மேலாதிக்கத்தை தாம் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டனர். சீதாவக்கை இராச்சியத்தை ஆண்ட மாயாதுன்ன அரசன்  முஸ்லிம்களுக்கு உதவிபுரியமுன்வந்தாலும் கோட்டை இராச்சியத்தை ஆண்ட 7ம் புவனேகபாகு போர்த்துக்கேயரின் வேண்டுகோளின் படி முஸ்லிம்களைத் கரையோரங்களில் இருந்து துரத்தினான். ஈற்றில் போர்த்துக்கேயரின் இந்நடவடிக்கையால் நீர்நிலைகளை அண்டிய நாட்டின் உட்பகுதிக்குச் சென்று முஸ்லிம்கள் குடியமர்ந்தனர். இதன் காரணமாகவே இன்றும் முஸ்லிம்கள் நாடளாவிய ரீதியில் சிதறி வாழ்கின்றார்கள்.
போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களின் பிரதான ஒரு இடமாக மல்வானை காணப்பட்டது. இலங்கையின் கரையோரப்பிரதேசங்களை போர்த்துக்கேயரிடம் கையளிப்பதற்கான அல்லது எமது நாடு இன்னொரு நாட்டின் ஆளுகைக்கு உட்படுவதற்கான முதலாவது ஒப்பந்தம் மல்வானையிலேயே நடந்தது. இதனால் இவ்வொப்பந்தம் மல்வானை ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகின்றது.
போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து துரத்துவதற்கு சீதாவக்கை மன்னன் மாயாதுன்ன தன் மகன் இராஜசிங்கனின் தலைமையில் முல்லேரியா போரை நடத்தினான். 1562 இப்போரில் மல்வானை பகுதியில் இருந்த முஸ்லிம்கள் இராஜசிங்கனுக்கு உதவியதால் அங்கிருந்த முஸ்லிம்களைப் போர்த்துக்கேயர்கள் இம்சைப்படுத்தினர். இதனால் அப்பிரதேசத்தை விட்டு பல முஸ்லிம்கள் களனி ஆற்று வழியே  ஹங்வெல்ல,  பூகொட பிரதேசங்களுக்கு வந்து பின்னர் கஹட்டோவிட்ட, திஹாரிய போன்ற இடங்களில் வந்து குடியேரியனர். இது கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு என்ற ஆய்வு நூலில் இடம்பெற்றுள்ளது.
கஹட்டோவிட்டாவுக்கு முஸ்லிம்களின் வருகை பற்றிய அடுத்த தகவல் இவ்வாறு அமைந்துள்ளது.
அத்தனகல்லை பண்டாரஓவிட்ட என்ற இடத்துக்கு வந்திருந்த மலையாளத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஷேக் அப்துல் காதர் மற்றும் அவரது தோழர்களை சந்திக்க அட்டுலுகம இலிருந்து முஹம்மத் காஸிம் என்பவர் அடிக்கடி வந்துள்ளார். இச்சந்தர்ப்;பத்தில் முஹம்மத் காஸிம் என்பவரை அவ்வழியே வந்த சிங்கள மன்னன் ஒருவன் இவரது திறமைகளைக் கண்டு இப்பிரதேசத்தை அன்பளிப்பாக வழங்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்நிகழ்வின் பின்னர் கஹட்டோவிட்ட பிரதேசம் முஸ்லிம்களின் குடியிருப்பாக மாறி பல்வேறு இடங்களிலிருந்தும் இங்கு வந்து குடியமர்ந்தனர்.
கஹட்டோவிட்டாவின் மார்க்க எழுச்சி வரலாறு பற்றிக் குறிப்பிடும் போது இருவரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
கஹட்டோவிட்டாவுக்கு அறபு நாடுகளிலிருந்து மார்க்க போதனைக்காக இருவர் வந்துள்ளனர். 1700 களின் பிற்பகுதியில் ஷெய்க் பாதிப் மவ்லானா (யமனி) ஷெய்க் முபாரக் மவ்லானா அவர்களும் வருகை தந்து ஊரின் மார்க்க எழுச்சியில் பெரிதும் பங்காற்றியுள்ளனர். ஷெய்க் முபாரக் மவ்லானா இங்கு நீண்டகாலம் தங்கிருக்காவிட்டாலும் ஷெயக் பாதிப் மவ்லானா அவர்கள் தாம் மரணிக்கும் வரை இங்கு தங்கியிருந்து மதப்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் இருவரினதும் போதனைகளை நடைமுறைப்படுத்த இவ்விரு தக்கியாக்கள் கட்டப்பட்டன.
இதன் பின்னர் 1792 இல் இப்பிரதேசத்தின் முதல் பள்ளிவாயல் கஹட்டோவிட்டாவுக்கும் உடுகொடைக்கும் இடையிலிருந்த கொடல்ல எனும் இடத்தில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இது மோதரான அப்பா அவர்களின் காணியில் சின்ன லெப்பை சுலைமான் லெப்பபை அவர்களின் தலைமையில் கட்டப்பட்டது.
தற்போதுள்ள பெரிய பள்ளிவாசல் கறுத்த ஆலிம் அப்பா அவர்களின் வழிகாட்டலில் 1795 இல் அத்தனகல்லையிலிருந்து குடியேறிய அஹமது லெப்பையால் வழங்கப்பட்ட காணியில் கட்டப்பட்டது. இவரே இப்பள்ளியின் முதல் கதீபும் ஆவார். 1970 இல் கஹட்டோவிட்ட ஜும்ஆ மஸ்ஜித் என்றழைக்கப்பட்ட இப்பள்ளிவாசல் முஹியுத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் எனப் பெயர் பெற்றது.
இதன் பின்னர் இரண்டாவது பள்ளிவாசலாக 1974 இல் மஸஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மானிக்கப்பட்டது. தற்போது ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளி அடங்கலாக மொத்தம் மூன்று ஜும்ஆ பள்ளிவாசல்கள் கஹட்டோவிட்ட கிராமத்தில் உள்ளன.
ஆரம்பத்தில் கல்வி நடவடிக்கைகள் பள்ளிவாசல்களை தளமாகக் கொண்டு இயங்கிவந்தன. பின்னர் 1920 இல் அரசினர் பாடசாலையாக இது மாற்றம் பெற்றது. தற்போது அல்பத்ரியா ம.வி. என்ற பெயரில் இது இயங்கிவருகின்றது.
அடுத்து பெண்களுக்கான தனியான பாடசாலை 1946 இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்று ஒரு தனியார் சர்வதேசப் பாடசாலை அடங்கலாக மொத்தம் 3 பாடசாலைகள் செயற்பட்டுவருகின்றன.
கஹட்டோவிட்ட சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களோடு ஒப்பிடும் போது கல்விமட்டத்தில் மிகச் சிறந்த நிலையில் அன்றும் இன்றும் இருவருகின்றது. உதவித் தேர்தல் ஆணையாளார், உதவிப் பரீட்சை ஆணையாளர் போன்ற உயர் அரச பதவிகளிலும் மற்றும் மருத்துவம், பொறியியல், சட்டம் ,  ஊடகத்துறை  போன்ற பல்வேறு துறைகளிலும் அதிகமானோர் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் முதல் இன்று வரை மார்க்கத் துறையிலும் பலர் பல்வேறு இயக்கங்களில் இருந்து பல ஆலிம்கள் தொண்டாற்றி வருகின்றனர்.
இவை தவிற 1959 ஆம் ஆண்டிலே கஹட்டோவிட்டாவுக்கான தனியான உபதபாற்கந்தோர் திறந்துவைக்கப்பட்டது. இங்கு 1980 இல் மின்சார இணைப்பும் வழங்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்ட ஒரு தனித்துவ அடையாளத்தைப் பிரதிபளிக்கும், கட்டுக்கோப்பான சமுக அமைப்பைக் கொண்ட ஒரு ஊராக கஹட்டோவிட்ட திகழ்ந்து வருகின்றது.

தொகுப்பு ஹிஷாம் றாஸிக்

புதுவருடம் சொல்லும் செய்தி.

புதுவருடம் சொல்லும் செய்தி.


அன்பின் இஸ்லாமிய சொந்தங்களே..

முஹர்ரம்.. இது முஸ்லிம்களின் புதுவருடம். அன்னியக் கலாசாரங்களில் கரைந்துபோகாத இறை விசுவாசிகளின் தனித்துவம் மிக்க வருட உதயம். புனித மாதம் என அல்லாஹ்வினால் பிரகடனப்பட்ட அருள் மிகு மாதம். இஸ்லாம் என்ற விருட்சம் உலகெலாம் கிளைவிட்டுத் தலைத்தோங்க அடித்தளமாக அமைந்த,  அன்றைய முஸ்லிம்களின் உச்ச கட்டத் தியாகத்தை உலகறியச்செய்த ஹிஜ்றத்தை நினைவு கூறும் மாதம். கொடுங்கோலன் பிர்அவ்னிடமிருந்து நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவரது சமுதாயமும் விடுதலை பெற்ற மாதம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமைப் பேரன் ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு ஷஹீதாகிய மாதம். இப்படி இஸ்லாமிய வரலாற்றிலே எத்தனையோ மைல்கற்களை எமது நினைவலைகளில் மீண்டும் ஒரு முறை மீட்டிப்பார்க்க வைக்க எம்மைத் தேடி வந்துள்ளது முஹர்ரத்தோடு தொடங்கும் இஸ்லாமியப் புதுவருடம்!


பல சோகங்களுக்குள்ளும் ரணங்களுக்குள்ளும் சிக்கித் தவிக்கும் உலக முஸ்லிம்களுக்கு நம்பிக்கையையும் கூடவே பல எதிர்பார்ப்புகளையும் சுமந்துகொண்டு மலர்கிறது இப்புத்தாண்டு. பட்டாசு கொழுத்தி, புத்தாடை அணிந்து கொண்டாடுவதற்காய் ஒன்றும் புத்தாண்டு எம்மிடம் வரவில்லை. எம்மைக் கடந்து சென்ற வருடத்தை ஒரு முறை மீள்பரிசீலனை செய்யவும் அதிலிருந்து பெற்ற அனுபவங்கள்,  படிப்பினைகள் மூலம் மலர்கின்ற புது வருடத்தை எப்படி அழகாகத் திட்டமிட்டுக் கழிப்பது பற்றிச் சிந்திக்கவும் அல்லாஹ் எமக்களித்த வாய்ப்பாகவல்லவா நாம் இதனைக் கருதவேண்டும்?


கடந்த வருடத்தில் அல்லாஹ்வுடனான எமது உறவுகள் எப்படி இருந்தன? அவனது கட்டளைகளை வாழ்வில் எடுத்தநடப்பதில் எந்தளவு கரிசனை காட்டினோம்? அவன் தடுத்த விடயங்களில் இருந்து எந்தளவுக்கு நாம் தூரமாக இருந்தோம்? அவனது கொள்கையை இம்மண்ணில் உயர்ந்தோங்கச் செய்வதற்காக நாம் என்னென்ன செய்தோம்? ஏனைய முஸ்லிம் சகோதரர்களோடு சீரான உறவை வைத்திருந்தோமா? அவர்களது கஷ்ட நஷ்டங்களில் முன்னேற்றத்தில் எந்தளவு நாம் பங்கெடுத்தோம்? அவர்களது இன்னல்களைத் தீர்க்க எம்மால் இயன்ற எந்த முயற்சிகளைச் செய்தோம்? எமது சமூகத்தின் இருப்பையே ஆட்டம் காணச் செய்யும் பயங்கரமான  பிரச்சினைகளில் நாம் எந்தளவு கவனம் செலுத்தினோம்?


இப்படி இன்னோரன்ன வினாக்களை நாம் எம்மிடத்தில் கேட்டுக்கொள்ளவேண்டிய தருணம் இது. எமது தவறுகளைஇ குறைகளை நாம் முதலில் இனம்காணவேண்டும். பின்னர் அவற்றுக்கு நியாயம் கூறுவதை விட்டுவிட்டு அவற்றைத் திருத்திக்கொண்டு எமது எதிர்காலத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். கடந்த தவறுகள், பிழைகள், பொடுபோக்குகள் அனைத்தில் இருந்தும் மீட்சி பெறுவதற்கு ஒரு திடசங்கட்பத்தை இப்புத்தாண்டில் நாம் எம்மில் ஏற்படுத்திக்கொள்வோம்.


விடியலுக்கு முன்னுள்ள நேரம்தான் மிகவும் இருள்மிக்கது, பயங்கரமானது. இது உலக நியதி! எனவே இன்று நாலா புறமும் சூழ்ந்துள்ள சூழ்ச்சிகளும் அநியாயங்களும் கெடுபிடிகளும்  எம்மை விட்டு அகழும் காலம் நெருங்கிவிட்டது. அந்த விடியல் மீட்சி  சீக்கரம் கிடைப்பதற்காய் நாமும் அயராது உழைப்போம்! இதற்கான உறுதியை இப்புத்தாண்டில் நாம் எம்முள் செதுக்கிக்கொள்வோம்!


எதிர்காலம் எமதே!

தரீக்கா

தரீக்காக்கள்
தோற்றம்
 ஆத்மீக ஞானிகளால் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமிய ஆன்மீகப் பயிற்சி முறைகளை உள்ளடக்கிய ஓர் ஆன்மீக மரபே தரீக்கா எனப்படும்

பிக்ஹ் கலையில் ஒரு கட்டத்தில் மத்ஹப்கள் தோன்றியது போல் தஸவ்வுப் கலையில் ஒரு கட்டத்தில் தரீக்காக்கள் தோற்றம் பெற்றன.
அடிப்படைகள்

தரீக்காக்களை உருவாக்கிய ஆத்மீக ஞானிகள் இறைநெருக்கத்தை அடைய 4 படித்தரங்களை முன்வைத்தனர்.
1. ஷரீஆ  : இதுவே ஏனைய படித்தரங்களுக்கு அடிப்படையாகும்.
2. தரீக்கா : இறைநெருக்கத்தை அடையும் வழிமுறை
3. ஹகீகா : இறைவணக்கத்தில் ஆழ்ந்து ஈடுபடும் போது இறைநேசர்கள்    (வலிமார்கள்) தெய்வீக மெய்ம்மை
 நிலை உருவாகும்.
4. மஃரிபா  : ஹகீகா மூலம் இறை நேசர்கள் பெறும் பேரமுதம்.
தரீக்காவில் முக்கியம் பெறும் 4 விடயங்களாவன.
1. செய்கு (ஆன்மீக வழிகாட்டி)
2. முரீத் (சீடர்)
3. வழிமுறை
4. பைஅத் (ஷெய்கிடமிருந்து சீடர் பெறும் உறுதிமொழி)
தரீக்காக்களின் குறிக்கோள்
ஷரீஆவின் ஒளியில் மக்களுக்கு வழிகாட்டுவதே தரீக்காக்களின் பிரதான குறிக்கோள் ஆகும்.
தரீக்காவின் குறிக்கோள் இறைவழிகாட்டல்களை நிறைவேற்றுவதில் இன்பமும் சுவையும் ஏற்படுவதோடு விலக்கப்பட்ட கருமங்களில் அருவருப்பு ஏற்படும் நிலையை அடைவதாகும். (இமாம் இல்யாஸ் (ரஹி))
தரீக்காக்களில் பைஅத்
 இறைதூதரின் வழிமுறையைப் பின்பற்றி (பைஅதுல் அகபா) ஆன்மீக வழிகாட்டியான ஷெய்குவிடம் அவரைப் பின்பற்றும் சீடர்கள் இஸ்லாத்துக்கு முரணான சகல விடயங்களை, பித்அத்களை விட்டும் தவிர்ந்து வாழ்வதாகவும் உலக இன்பங்களில் மூழ்காது இஸ்லாத்துக்காக உழைப்பதாகவும் செய்துகொள்ளும் விசுவாசப் பிரமாணமே பைஅத் எனப்படுகின்றது.

இந்த பைஅத் மூலம் ஆத்மீக குருவுக்கும் சீடர்களுக்கும் ஒரு இறுக்கமான பிணைப்பு ஏற்படுவதோடு அவர்கள் ஒரு கட்டுக்கோப்பில் வாழவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

தரீக்காக்களின் பங்களிப்புக்கள்
படைகளால் வெற்றிகொள்ளப்படாத பல நாடுகளில் இஸ்லாம் பரவ தரீக்காக்கள் பெரும் பங்களித்துள்ளன.
இந்தோனேசியா, சீனா. இந்துசமுத்திரத் தீவுகளில் இஸ்லாத்தைப் பரப்புவதில் ஆன்மீக குருக்களிடம் இருந்து பயிற்சி பெற்ற சீடர்கள் இவ்விடங்களுக்கெல்லாம் சென்று பெரிதும் உழைத்துள்ளனர். (இமாம் அப்துல் காதிர் ஜீலானி)

கொடூரமான தாத்தாரியர் படையை வெற்றிகொண்டு அவர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதிலும் தரீக்காக்கள் பெரும் பங்களிப்புச் செய்துள்ளன.
ஸலாஹுத்தீன் ஐயூபி, நிஸாமுல் முல்க் தூர்ஸி போன்ற சிறந்த பொறுப்புள்ள ஆட்சியாளர்களை தரீக்காக்கள் உருவாக்கியுள்ளன.

ஜிஹாத் மற்றும் சுதந்திரப் போராட்டங்களும் தரீக்காக்களால் வலுப்பெற்றுள்ளன. (இந்தோனேசியா)
பிரதான தரீக்காக்கள்
1. காதிரிய்யா  : அப்துல் காதிர் ஜீலானி ஹி 565 (ஜீலான்)
2. ஷஷுஹரவர்திய்யா : ஷிஹாபுத்தீன் ஷஷுஹரவர்தி ஹி 632
3. ரிபாஇய்யா  : செய்யித் அஹ்மத் அல் கபீர் அர் ரிபாஈ - பஸறா
4. ஷாதுலிய்யா  : நூருத்தீன் அஹ்மத் அஷ் ஷாதுலி – மொரோக்கோ
5. நக்ஷபந்திய்யா  : பஹாஉத்தீன் நக்ஷபந்தி – புகாரா
6. ஜிஸ்திய்யா  : குவாஜா அபூ இஸ்ஹாக் ஜிஸ்தி – சிரியா

தொகுப்பு: எம். ஆர். ஹிஷாம் முஹம்மத்


Thursday, July 21, 2011