Thursday, March 22, 2012

ஹுதைபியா உடன்படிக்கை




ஹுதைபியா உடன்படிக்கை 

மதீனா நகரில் வாழ்ந்த முஸ்லிம்களுடனும் யுதர்களுடனும் தமதுரிமைகள், கடமைகள் பற்றிய நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தமே மதீனா சாசனம் எனப்படுகின்றது. மதீனாவில் அப்போது பிரதானமாக முஸ்லிம்கள், யூதர்கள், காபிர்கள், கிறிஸ்தவர்கள் என்போர் காணப்பட்டனர்.

பின்னணி
யூதர்ளுடனான ஒரு பிணைப்பை ஏற்படுத்தல்.
மதீனாவில் அவ்ஸ், கஸ்றஜ் இடையேயும் முஹாஜிர், அன்ஸார் இடையேயும் இணைப்பு ஏற்பட்டதுபோல் அங்கு கணிசமாக வாழ்ந்த யூதர்களுடனும் ஒரு பிணைப்பை ஏற்படுத்திய வேண்டிய தேவை ஏற்பட்டமை. இந்த யூதர்களுள் பனூ கைனுகா, பனூ நழ்ர், பனூ குறைழா (மொத்தம்: 11) போன்ற முக்கியமான கோத்திரங்கள் அடங்கும். இந்த யூதர்கள் தம்மிலிருந்து இறுதி நபி தமக்கு சார்பான ஒருவராகத் தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
முஸ்லிம்களை, இஸ்லாமிய அரசைப் பலப்படுத்தல். 
அருகில் இருந்த மக்கா குறைஷியருடன் முஸ்லிம்களுக்கு கடும் பகை இருந்ததால் அவர்களின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்புப் பெற வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இருந்தது. இதற்கு யூதர்கள் துணைபோகக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் விழிப்பாக இருந்தார்கள்.
யூதர்களின் நிலை 
யூதர்களும் இவ்வுடன்படிக்கையில் கையொப்பம் இடுவதன் ஊடாக கிறிஸ்தவர்களுக்கெதிராக ஒரு கூட்டணியை உருவாக்கலாம் என்றும் இறுதி நபியை தமக்கு சார்பாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் எதிர்பார்த்தனர்.
அப்துல்லாஹ் பின் உபையின் நிலைப்பாடு
அவ்ஸ், கஸ்றஜ் இடையிலான பூஆத் யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து அப்துல்லாஹ் பின் உபையிக்கு மதீனா தலைமைத்துவம் ஏகமனதாக ஒப்படைக்கப்படவிருந்தது. எனவே இவனது தலைமையில் ஏற்படக் கூடிய கிளர்ச்சியை முன்கூட்டியே தவிர்க்கவேண்டி தேவையும் காணப்பட்டது.

நோக்கங்கள் - இலட்சியங்கள் 
இஸ்லாமிய சமூகத்தையும், இஸ்லாமிய அரசையும் அங்கீகரிக்கச்
        செய்கின்ற முயற்சியாக இது அமைந்தது.
மதீனாவில் வாழ்ந்த குடிமக்கள் சகலரினதும் உரிமைகளையும்
        பாதுகாத்தல், கடமைகளை நிர்ணயித்தல்.
இஸ்லாமிய அரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
முஹாஜிர்களின் பொருளாதார இழப்பை ஈடுசெய்து முன்னேற்றல்.
வேறுபட்ட பிரிவினரிடையே உடன்பாடு காணுதல்
சமூக, அரசியல் செயற்றிட்டங்களை முன்னெடுத்தல்

முக்கியத்துவம்  
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் அரசியல் துறையில் பெறப்பட்ட மிகப்பெரும் சாதனையாக இது கருதப்படுகின்றது. இதன் மூலம் நபி (ஸல்)  அவர்களின் அரசியல் தலைமை சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இஸ்லாமிய அரசுக்கான ஓர் அரசியல் யாப்பாக இது வடிவமைக்கப்பட்டது.
இரத்தம் சிந்தாமலேயே ஒரு பசுமைப் புரட்சியை செய்வதற்கு இது வழிவகுத்தது.
இன, நிற, மத வேறுபாடின்றி மனிதனின் அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் வழங்கிய முதல் சாசனமாக இதுவே அமைந்தது. பிரித்தானியாவில் மக்னா காட்டா உடன்படிக்கை கூட ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே (1215) மேற்கொள்ளப்பட்டது.
இஸ்லாமிய அரசை உருவாக்கத் தேவையான ஆட்புல எல்லைகளைக் கொண்ட (வுநசசவைழசல) பிரதேசம் ஒன்று இதன் மூலம் உருவாகியது.
மதீனா அரசைப் பாதுகாக்கும் பொறுப்பு சகலரிடமும் விடப்பட்டது.

நிபந்தனைகள் 
இவை பற்றி ஸீறா இப்னு ஹிஷாமில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 44 நிபந்தனைகளில் 23 வரையானவை முஹாஜிர் அன்ஸார்களோடும் ஏனையவை யூத, கிறிஸ்தவர்களோடும் தொடர்புபட்டவை. அவற்றுள் சில:
1. இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திடுவோர் அனைவரும் ஒரே நாட்டவராகக் கருதப்படுவர்.
2. ஒவ்வொருவருக்கும் சமய சுதந்திரம் உண்டு.
3. உடன்படிக்கை செய்துகொண்ட யூதர்களைப் பாதுகாப்பது முஸ்லிம்களின் கடமை.
4. தமக்கிடையே ஏற்படும் கருத்து முரண்பாடுகளில் தீர்வுகாண அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நாடவேண்டும்.
5. மதீனாவை இரத்தம் சிந்தாத புனித பூமியாக அங்கீகரித்தல் வேண்டும்
6. போரிடுவதானாலும் உடன்படிக்கை செய்வதானாலும் இரு தரப்பினரும் கலந்தாலோசித்தே செய்ய வேண்டும்.
7. மக்கா குறைஷியருக்கோ ஆதரவாளர்களுக்கோ புகலிடம் வழங்கக்கூடாது.
8. குற்றமிழைத்தோர், அல்லது உடன்படிக்கை மீறுவோர் யாராயினும் தண்டிக்கப்படுவர்.
9. முஸ்லிம்களும் யூதர்களும் நட்புடன் வாழ வேண்டும்.
10. தத்தம் கோத்திரக் குற்றவாளிகள் செலுத்த வேண்டிய நட்டஈட்டுத் தொகையை செலுத்துவது அக்கோத்திரத்தைச் சேர்ந்தது.

மதீனாவுக்கான ஹிஜ்றத்



மதீனாவுக்கான ஹிஜ்றத்  

ஹிஜ்றத் என்பது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இது நுபுவ்வத் 13ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இதன் முக்கியத்துவம் காரணமாக இதனை வைத்து உமர் (ரழி) அவர்கள் ஆண்டுக்கணிப்பை ஆரம்பித்தார்கள்.

ஹிஜ்றத்துக்கான காரணங்கள் 

1. அல்லாஹ்வின் கட்டளை. நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கனவில் கண்டமை.
2. மக்காவில் இஸ்லாமியப் பிரச்சாரம் தேக்கநிலை அடைந்தமையும் குறைஷியரின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்தமையும்.
3. ஒரு முன்மாதிரியான இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு உகந்த சூழல் மக்காவில் காணப்படாமை. அதிகார வர்க்கத்தினரும் பழமைவாதிகளும் இதற்குப் பெரும் தடையாக அமைந்தமை.
4. சிலை வணக்கத்தையும் தமது மூடப் பழக்கவழக்கங்களையும் பாதுகாப்பதன் மூலம் குறைஷிக் காபிர்கள் தமது அரசியல், சமூக, பொருளாதார தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சித்தமை.
5. அகபா உடன்படிக்கை மூலம் முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தமையும் இஸ்லாமிய தஃவாவுக்காக ஒரு பொருத்தமான தளமாக மதீனா அடையாளம் காணப்பட்டமையும்.

மதீனாவில் ஹிஜ்றத் சாத்தியமடைவதற்கான காரணிகள் 

1. மதீனா மக்கள் அறிவில் ஆர்வமுடையோராகவும் எளிதில் புரிந்துகொள்வோராகவும் நியாயமானவர்களாகவும் இருந்தமை.
2. மக்கா வாசிகளை விட மதீனா வாசிகள் கலாசார முன்னேற்றம் கொண்டவர்களாக இருந்தமை.
3.. மதீனாவில் யூத, கிறிஸ்தவர்கள் வாழ்ந்ததால் நபித்துவம் பற்றிய ஓரளவு அறிமுகமும் முன்னைய வேதங்கள் பற்றிய அறிவும் இருந்தமை. இதனால் இஸ்லாத்தை எடுத்துரைப்பது ஓரளவு இலகுவாக இருந்தமை.
4. மதீனாவில் நீண்டகாலமாக மோதிக்கொண்டிருந்த அவ்ஸ், கஸ்றத் கோத்திரத்தினரிடையே சமாதனாத்தை ஏற்படுத்திவைக்கக்கூடிய ஒரு சமாதானத் தூதுவர் தேவைப்பபட்டமை.
5. மக்காவின் தலைமைத்துவத்துக்கு ஈடாக அல்லது அதனை விட மேலான ஒரு தலைமைத்துவம் தம்மிடையே உருவாக வேண்டும் என மதீனாவாசிகள் விரும்பியமை.
6. மதீனாவுடனான இரத்த உறவு நபி (ஸல்) அவர்களுக்கு இருந்தமை. ஹாசிம் கஸ்றஜ் கோத்திரத்தில மணம் செய்திருந்தமை.

ஹிஜ்றத் ஒரு திட்டமிட்ட பயணம்

ஹிஜ்றத் என்பது நபி (ஸல்) அவர்கள் தனது உயிரைக் காத்துக்கொள்வதற்காக தப்பியோடிய ஒரு திடீர் முயற்சி அல்ல. அது நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்ட ஒரு விவேகமான செயற்பாடாகும். இதற்கு சான்றாக பல்வேறு விடயங்களை முன்வைக்க முடியும்.
ஒரு முழுமையான சமூதயா அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு பல இடங்களை நபியவர்கள் தேடியமையும் இறுதியில் மதீனாவை அதற்காகத் தெரிவு செய்தமையும்.
மதீனாவுக்குச் செல்ல முன்னர் அங்கிருந்து வந்தவர்களோடு (அகபா) உடன்படிக்கைகளைச் செய்துகொண்டதோடு முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களை இஸ்லாமியப் பிரச்சாரத்துக்காக அனுப்பி வைத்தமை. இது மதீனாவில் ஒரு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்தும் முன்னேற்பாடாக அமைந்தது.
ஹிஜ்றத் செய்வதற்கு அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை நபி (ஸல்) காத்திருந்தமை.
ஹிஜ்றத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஏற்பாடு செய்யுமாறு அபூ பக்ர் (ரழி)அவர்களுக்கு நபியர்கள் பொறுப்பு அளித்தமை.
குறைஷிக் காபிர்களின் அடைக்கலப் பொருட்களை ஒப்படைப்பதற்கு அலி(ரழி)அவர்களை நியமித்தமை.
அப்துல்லாஹ் பின் அர்கத் எனும் முஸ்லிம் அல்லாத ஒரு தேர்ச்சி பெற்ற ஒருவரை வழிகாட்டியாக ஹிஜ்றத்தின் போது நியமித்தமை.
குறைஷியருடைய நடவடிக்கைகளை அறியவும் உணவைப் பெற்றுக்கொள்ளவும் ஏற்கனவே ஏற்பாடு செய்தமை. (அஸ்மா (ரழி))
உணவு கொண்டுவருவோரின் பாதச் சுவடுகளை அழிப்பதற்கான ஆமிர் பின் ஸுஹைரா எனும் இடையரை நியமித்தமை.
நேரடியாக மதீனாவுக்குச் செல்லாமல் ஸவ்ர் குகையில் தங்கிவிட்டுச் சென்றமையும் புதியதொரு பாதையில் சென்றமையும்.

ஹிஜ்றத்தின் முக்கியத்துவம் 

1. இஸ்லாமிய சட்டங்கள், வழிபாடுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
அதான், கிப்லா மாற்றம்
ஜமாஅத், ஜும்ஆ தொழுகைகள்
ரமழான், நோன்பு, ஸகாத், ஹஜ்...
2. இஸ்லாமிய தஃவா முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
வேதக்காரர்களை நோக்கி பிரச்சாரம் பலமாக முன்னெடுக்கப்பட்டது.
3. சமுதாய அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டமை.
அவ்ஸ், கஸ்றஜ் உறவு, முஹாஜிர், அன்ஸார் பிணைப்பு,
        வேதக்காரருடனான உறவு
4. இஸ்லாமிய அரசு ஒன்று உருவாக்கப்படல்.
        நபி (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைவராக மட்டுமன்றி அரசியல்    
        தலைவராகவும் மாறி மதீனாவைத் தலைநகராகக் கொண்டு
       ஆட்சிசெய்யும் நிலை தோன்றியது. குர்ஆன், ஸுன்னா அரசயில் யாப்பாக  
        மாற்றப்படுகின்றது.
5. குர்ஆன் எதிர்பார்க்கும் முன்மாதிரியான முஸ்லிம் உம்மத்
        உருவாக்கப்பட்டல் .
6. முஸ்லிம்களுக்கிருந்த கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் நீங்கி சுதந்திரமாக
        இஸ்லாத்தைப் பின்பற்றச் சந்தர்ப்பம் கிடைத்தல்.


ஹிஜ்றத் உணர்த்தும் படிப்பினைகள் 
1. நபி  (ஸல்) தன்னிகரற்ற தலைமைத்துவம் ஹிஜ்றத்தில்
        வெளிப்படுகின்றது.  பொருத்தமான சந்தர்ப்பத்தில் பொருத்தமான முடிவு
        எடுத்தல்.
2. சில விடயங்களை இரகசியமாகவும் இராஜதந்திரமாகவும் நடத்தல்.
        தனது ஹிஜ்றத்தை நபியவர்கள் இறுதிவரை இரகசியமாக
        வைத்திருந்தமை.
3. ஏதிரிகளிடம் இருந்து தப்புவதற்காக பல்வேறு தந்திரோபாயங்களை
        மேற்கொள்ளல்.  ஸவ்ர் குகையில தங்குதல், பாதையை மாற்றுதல்.
4. ஸஹாபாக்களின் ஈடிணையற்ற தியாகத்தை இது பறைசாற்றுகின்றது.
        அலீ (ரழி)அபூ பக்ர் (ரழி)
5. திட்டமிடல் என்பது இஸ்லாத்தில் இன்றியமையாதது. இதனை நபி (ஸல்)
        அவர்கள் தனது வாழ்வில் எப்போது கடைப்பிடித்துள்ளார்கள்.
6. அல்லாஹ் மீது உண்மையான தவக்குல் வைத்தல். ஸவ்ர் குகை சம்பவம்.
7. இஸ்லாமிய தஃவாவில் பெண்களின் பங்களிப்பு (அஸ்மா(ரழி))

பத்ர் யுத்தம்



பத்ர் யுத்தம் 

முஸ்லிம்களுக்கும் குறைஷிக் காபிர்களுக்கும் ஹிஜ்றி இரண்டாம் ஆண்டில் ரமழான் 17ம் நாள் நடந்த முதல் போரே பத்ர் யுத்தமாகும். நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் போராகவும் இது (غزوة ) அமைந்தது. நபி (ஸல்)  அவர்கள் பிரதானமாக 11 யுத்தங்களிலும் மொத்தமாக 26 யுத்தங்களிலும் கலந்துகொண்டுள்ளார்கள்.

யுத்தத்துக்கான காரணிகள் 
• முஸ்லிம்களை வலுக்கட்டாயப்படுத்தியேனும் போருக்குள் நுழைவிப்பதற்கு குறைஷியர் மேற்கொண்ட நடவடிக்கைகள்
     உம்றா செய்ய வருவோரை இம்சித்தல்.
     தோட்டங்களுக்குத் தீ மூட்டல்
     மந்தைகளைக் கொள்ளையடித்தல்.
     மதீனாவில் இருந்த முனாபிக்களைத் தூண்டி முஸ்லிம்களை அங்கிருந்து  
    வெளியேற்ற முயற்சித்தல்
.
மதீனாவுக்குச் சென்ற பிறகும் முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடுவதற்கு குறைஷிக் காபிர்கள் விரும்பாமை. (கொலைசெய்தல், இம்சித்தல், சொத்துக்களை அபகரித்தல்) இதனால் எதிர்ப்புணவர்வுகள் வலுப்பெற்றன.

நபி (ஸல்) அவர்களை எப்படியேனும் பலிதீர்க்க வேண்டும் என்ற வெறி குறைஷியரிடம் புரையோடிப்போய்க் கிடந்தமை.

முஸ்லிம்களின் கடவுள் கொள்கை குறைஷியரின் கடவுள் கொள்கையை மிகைத்துவிடும் என்ற பயம் குறைஷியரிடம் இருந்தமை.

குறைஷித் தலைவர்கள் தமது அதிகாரத்தை இழந்துவந்தமை. (அபூ ஸுப்யான், வலீத் பின் முகீரா)

இஸ்லாத்தின் துரிதமாக எழுச்சி கண்டமையும் அது பரவியமையும் காபிர்களிடையே காழ்ப்புணர்வை ஏற்படுத்தியது.
மக்காவின் செல்வாக்கு குறைவடைந்து மதீனாவின் செல்வாக்கும் முக்கியத்துவமும் அதிகரித்தமை.
மதீனாவில் நபி (ஸல்)  அவர்கள் தொடர்ந்து நிலைகொண்டால் மதீனா ஊடாக சிரியா நோக்கிச் செல்லும் மக்கா வியாபாரிகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என காபிர்கள் அஞ்சியமை.
நபி (ஸல்)  அவர்கள் தமது ஆதரவாளர்களுடன் படைதிரட்டி வந்து மக்காவைத் தாக்கலாம் என குறைஷிக் காபிர்கள் கருதியமை.
நபி (ஸல்) அவர்களின் கண்காணிக்குழுவினரின் (ஸரிய்யா) நடவடிக்கைகள்.

இவ்வாறான ஸரிய்யாக்கள் (சிறு படைப்பிரிவுகள்) மக்கா-சிரியா இடையே வியாபாரம் செய்த கள்வர் கோஷ்டிகளை இடைமறித்து அவர்களது பொருட்களைக் கைப்பற்றினர்.
இது குறைஷிக் காபிர்களை எச்சரிப்பதற்காகவும் முஸ்லிம்களைப் பற்றிய பலத்தை மதீனா வாசிகளுக்கு உணர்த்தவுமாய் அமைந்தது.

மக்கா – மதீனா எல்லைப் பகுதியில் நக்லா எனும் இடத்தில் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் தலைமையில் 12 பேர் இதில் ஈடுபடுத்தப்படல். கண்காணிப்புக்காக மாத்திரம் அனுப்பப்பட்ட இக்குழுவினர் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மோதலில் உமர் பின் ஹழ்றமி தலைமையிலான படையினரைத் தாக்கப்பட்டு உமர் பின் ஹழ்ரமி என்ற முஷ்ரிக் கொலைசெய்துவிடல். ரஜப் மாதத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் குறைஷியரின் வெறி உணர்வைத் தூண்டக் காரணமாய் அமைந்தது. எனவே குறைஷியர் போர் ஆயத்தங்களில் ஈடுபட்டனர்.

உடனடிக்காரணமும் முஸ்லிம்களின் ஆயத்தமும்.
ஷாமிலிருந்து மக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த அபூ ஸுப்யானின் வர்த்தகக் குழு வழிமறிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களைப் பணித்தார்கள். குறைஷியரைப் பயமுறுத்தவே அன்றி யுத்தம் செய்யும் நோக்கில் இதனை நபியவர்கள் செய்யவில்லை. அபூ ஸுப்யான் பாதுகாப்புக் கோரி மக்காவுக்குத் தூதனுப்ப இச் செய்தி மிகைப்படுத்தப்பட்டு மக்காவில் பரவியது. அத்துடன் அபூ ஸுப்யானின் குழுவும் தப்பிச் சென்றுவிட்டது. இதன் பின்னர் அபூ ஜஹ்ல் தலைமையில் குறைஷிக் காபிர்கள் முஸ்லிம்களை எதிர்க்க பத்ர் எனும் இடத்தில் தங்கினர். இதனால் முஸ்லிம்கள் இப்படையை எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் இந்த யுத்தத்தில் ஈடுபடுவது குறித்து அன்ஸார்களின் கருத்தையே அதிகம் எதிர்பார்த்தார்கள். அவர்கள் முழுமையாக ஜிஹாத் புரிய ஒத்துழைக்க முன்வந்தார்கள்.

பத்ரில் முகாமிடுவதில் நபி (ஸல்) அவர்கள் ஹப்பாப் இப்னுல் முன்திரின் (ஸல்) ஆலோசனையை ஏற்றார்கள்.

ஸஃத் பின் முஆத் (ரழி) நபி (ஸல்)  அவர்களுக்கு பின்வரிசையில் ஒரு பல்லாக்கு அமைக்கப்படவேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள்.

பத்ர் களமும் ஆள், ஆயுதப் பலமும்

முஸ்லிம்கள்
மொத்தம்: 313 பேர் (207 அன்ஸாரிகள்)
கவசங்கள் : 06
குதிரை வீரர்கள் : 03, குதிரைகள்: 02
ஒட்டகைகள்: 70

குறைஷிக் காபிர்கள்
மொத்தம்: 1000 பேர்
கவசம் அணிந்தோர்: 600 பேர்
குதிரை வீரர்கள் : 100 பேர்
ஒட்டகைகள்: 700

முஸ்லிம்களின் வெற்றிக்கான காரணிகள் 
நபி (ஸல்) அவர்களின் சிறந்த வழிகாட்டலும் தலைமைத்துவமும்.
ஜிஹாத் பற்றிய இஸ்லாத்தின் போதனைகள்
உறுதியான ஈமான்.
       ஈமானோடு போரிடுவோருக்கு நிச்சயம் அல்லாஹ்வின் உதவி கிட்டும்  
       என்ற நம்பிக்கை.
       நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே  
       அவர்களைக் கொன்றான். (குர்ஆன்)
எதிரிகளின் பலவீனம்

பத்ர் வெற்றியின் விளைவுகள் 
மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி ஸ்திரம் அடைந்தமை.
முஹம்மத் (ஸல்) அவர்களின் தலைமைத்துவம் அங்கீகரிக்கப்படல்.
குறைஷியர் மீதமிருந்த கண்ணியம், செல்வாக்கையும் இழக்க நேரிடல்.
முஸ்லிம்களைப் பற்றிய அச்சம் எதிரிகளுக்கு ஏற்பட்டமை.
தொடர்ந்து வந்த வெற்றிகளுக்கும் இது அடிப்படையாக அமைந்தமை.
யுத்த ஒழுக்கங்கள், கனீமத் சட்டங்கள் போன்றவை பற்றிய தெளிவு
        ஏற்படல்.
அல்லாஹ் எப்போதும் முஸ்லிம்களுடன் இருப்பான் என்ற அசைக்க
        முடியாத நம்பிக்கை அவர்களிடம் ஏற்பட்டது.

பத்ர் வெற்றியின் முக்கியத்துவம் 
காபிர்களுக்கு எதிரான முதல் போராட்டமும் முதல் வெற்றியும்.
சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையில் நிகழ்ந்த போhரட்டம்.
        இத்தினத்தை குர்ஆன் யவ்முல் புர்கான் يوم الفرقانஎன அழைக்கின்றது.
இஸ்லாத்தின் எதிர்காலத்தைத் தீர்மானித்த போராட்டம்

பத்ரில் கள உயிரிழப்புக்கள்  
அபூ ஜஹ்ல், வலீத், உத்பா, ஸய்பா, வலீத் போன்ற தலைவர்கள் உட்பட 70
       இற்கும் அதிகமான காபிர்கள்.
முஸ்லிம்களில் 16 பேர் ஷஹீத் ஆயினர்.

மக்கா வெற்றி



மக்கா வெற்றி
மக்கா மீது முஸ்லிம்கள் படையெடுத்ததற்கான காரணியும் பின்னணியும்

முஸ்லிம்களோடு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்த பனூ குஸாஆக்களை குறைசிக் காபிர்களும் பனூ பக்ர் கூட்டத்தினரும் தாக்கி 20 பேரைக் கொலை செய்ததன் மூலம் ஹுதைபிய்யா உடன்படிக்கையை குறைசிக் காபிர்கள் மீறினர்.  இதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளைப் புறக்கணித்து தாமாகவே உடன்படிக்கையிலிருந்து வெளியேற முன்வந்தமை.

இவ்வுடன்படிக்கை மீறப்பட்டதன் பின்னர் அபூ ஸுப்யான் குறைஷியர் சார்பாக நபி (ஸல்) அவர்களுடன் சமாதானம் பேசுவதற்காக வந்தார். ஆயினும் நபி(ஸல்)  அவர்கள் எந்தவொன்றும் அவருடன் பேசவில்லை. பின்னர் அபூபக்ர் (ரழி)  உமர் (ரழி), அலி (ரழி)  ஆகியோரை அனுகியும் எதுவும் பயனளிக்கவில்லை.

பின்னர் நபி (ஸல்)  அவர்கள் மிக இரகசியமான முறையில் திடீரென தம் படையினருடன் மக்கா நுழையத் திட்டமிட்டார்கள். இச் செய்தியை மக்காவில் இருந்த தம் உறவினர் நலன் கருதி ஹாதிம் இப்னு அபீ பல்தா ஒரு பெண் ஊடாக இந்த இரகசியத்தை எழுதித் தூதாக அனுப்பி வைத்தார். இது வஹி மூலம் நபி (ஸல்)  அவர்களுக்கு உணர்த்தப்பட்டு அது தடுத்து நிறுத்தப்பட்டது. ஹாதிமுக்கு பத்ரில் கலந்து கொண்ட ஒரே காரணத்துக்காக மன்னிப்பு வழங்கப்பட்டது.

பின் திட்டமிட்டபடி நபி (ஸல்) அவர்கள் 10 000 பேருடன் மக்கா நோக்கிப் படையெடுத்துச் சென்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் அபூ ஸுப்யான் (ஸல்)இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பின் நபி(ஸல்) அவர்கள் அபூ ஸுப்யானின் வீட்டிலோ அல்லது தத்தமது வீடுகளிலோ அல்லது கஃபாவிலோ தஞ்சம் புகுந்தவர்கள் பாதுகாப்புப் பெற்றுவிட்டார் எனப் பிரகடனம் செய்தார்கள். இப்பிரகடனத்தை அபூ ஸுப்யான் (ரழி) குறைசியரிடம் போய் அறிவித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நுழைந்தார்கள். எவரும் எதிர்த்துப் போராட முன்வராததால் இரத்தம் சிந்தாமலேயே மக்கா முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. பின் கஃபாவில் இருந்த சிலைகளை நபி(ஸல்) அவர்கள் உடைத்தெரிந்தார்கள். பிலால் (ரழி) அவர்கள் தொழுகைக்காக அதான் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கினார்கள். அப்துல் உஸ்ஸா, இக்ரிமா பின் அபீ ஜஹ்ல் போன்ற ஒரு சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் படையைக் குறைசியர் எதிர்கொண்ட விதம் 
குறைசியர் தம் நகர எல்லையில் முஸ்லிம் வீரர்களை எதிர்பாராத விதமாக எதிர்கொண்டமை.
இந் நிலையில் முஸ்லிம்களோடு போரிடுகின்ற சக்தி குறைசியரின் காணப்படாமை.
இக்ரிமா. ஸப்வான், ஸுஹைல் தலைமையிலான குறைசியரின் எதிர்ப்புக்களும் காலித் பின் வலீத் (ரழி) தலைமையிலான முஸ்லிம் படை தாக்கப்பட்டமையும்.

மக்கா வெற்றியின் பின்னர் குறைசிகளை நபி (ஸல்) அவர்கள் எதிர்கொண்ட விதம்
தம் சகோதரர்களாக மதித்து அவர்களை விடுதலை செய்தமை

கடும் எதிரிகள் சிலருக்கு மரண தண்டனை வழங்கியமை. அவர்களில் சிலருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டமை.

ஹிஜ்றத்தின் போது விட்டுச் சென்ற பின் பெற்றுக்கொண்ட மக்காவாசிகளின் சொத்துக்களை மீளப் பெறாமை.

மக்கா வெற்றியின் விளைவுகள்
கஃபா சிலைவணக்கத்திலிருந்தும் தூய்மையாக்கப்பட்டமை. தௌஹீத் கோட்பாடு நிலைபெற்றமை.

மக்காவாசிகள் பலரும் மக்காவைச் சூழவிருந்த பல கோத்திரங்களும் இஸ்லாத்தை ஏற்றமை.

ஹுனைன் கோத்திரத்தை வெற்றி கொள்ள வாய்ப்புக் கிடைத்தமை

அறேபியர் நபி(ஸல்) தலைமையில் ஐக்கியப்பட்டமை.

ஹஜ்ஜதுல் விதாஃ



ஹஜ்ஜதுல் விதாஃ

இது ஹி 10 இல் தனது முதலும் இறுதியுமான ஹஜ்ஜின் போது அறபா மைதானத்தில் நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையாகும்.
இவ்வுரையில் முக்கியமாக பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

1. அல்லாஹ்வுக்கு மாத்திரமே அடிமையாக வாழ்தல்
மனிதன் மனிதனையோ அல்லது ஏனைய வஸ்துக்களையோ வணங்கும் இழிநிலையிலிருந்து நீங்க வேண்டும்.
2. மனித சமத்துவம்
அறபி, அஜமியை விடவோ அஜமி அறபியை விடவோ மேலானவர் அல்லர்.
அனைவரும் ஆதமின் பிள்ளைகள். ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர்.
3. அடிமைகளை கண்ணியமாக நடத்தல்
அடிமைத்துவத்தைப் படிப்படியாக ஒழிக்கவேண்டும். அவ் வகையில் உணவு, உடை என்பவற்றையெல்லாம் அவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.
4. பழிக்குப் பழி கிடையாது.
பழைய கொலைகளுக்காகப் பழி வாங்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று பிரகடனப்படுத்தியமை. ரபீஆ பின் ஹர்ஸின் மகனின் இரத்தப் பழியை ரத்துச் செய்தமை.
5. வட்டி ரத்துச் செய்யப்பட்டமை.
வறிய மக்களின் இரத்தத்தை உறிஞ்சக் கூடாது. இவ்வகையில அப்பாஸ் இன் வட்டியை முதலில் ரத்துச் செய்தமை.
6. பெண்கள் உரிமை வலியுறுத்தப்படல்.
உங்கள் மீது அவர்களுக்கும் அவர்கள் மீது உங்களுக்கும் உரிமை உண்டு என பெண் உரிமைகளை உறுதி செய்தமை.
7. முஸ்லிம்களின் உயிர், உடமை, மானம் பாதுகாக்கப்படவேண்டும்.
இந்த நாள், மாதம், இடம் எவ்வளவு கண்ணியமோ அதே போன்று முஸ்லிமின் உயிர், உடமை, மானம் பாதுகாக்கப்பட வேண்டும்.
8. குர்ஆன், ஸுன்னாவைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டமை.
உங்களிடம் இரு வியடங்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளும் வரை நீங்கள் வழிதவற மாட்டீர்கள் என குர்ஆனையும் ஸுன்னாவையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டமை.
9. இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யுமாறு பணித்தமை.
இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு இச் செய்தியை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர்கள் வந்தவர்களை விட அதிகம் உணர்ச்சிபெறக் கூடியவர்களாக இருக்கலாம் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டமை.

கவிதை எழுதுங்கள் ..


கவிதை எழுதுங்கள் ..

ஹிஷாம் றாஸிக்


கவிதை எழுதுங்கள்
எல்லோருக்கும் புரியும்படி
எளிமையாய் எழுதுங்கள்.

கவிதை எழுதுங்கள்
காதல் ஒன்றையே
கருப்பொருளாக்காதீர்கள்.

கவிதை எழுதுங்கள்.
முதுகெலும்பற்ற தலைமைகளுக்கு
முதுகு சொறியாதீர்கள்.

கவிதை எழுதுங்கள்
உண்மையைப் பொய்யாக்கி
பொய்களை மெய்யாக்காதீர்கள்

கவிதை எழுதுங்கள்
திரைபோட்ட ரகசியங்களை
திரைகிழித்துக் காட்டாதீர்கள்.

நிலவும் பெண்ணும் தாம்
கவிதையின் ஊற்றுக்கள் அல்ல.

கற்பனையும் பொய்களும் தாம்
கவிதைக்கு அணிகலன்கள் அல்ல.

இலக்கணம் மட்டும் தான்
கவிதைக்கு வரம்பு அல்ல.

கவிதை எழுதுங்கள்.

இக்பாலின் கவிதைகள்
பாகிஸ்தானை உருவாக்கியதே.

ஹஸ்ஸானின் கவிதைகள்
அண்ணலுக்காய் சவால் விட்டதே.

அலீ சொன்ன கவிதைகள்
அழியாமல் வழிகாட்டுதே.

கவிதை எழுதுங்கள்



கவிதையால் ...
பூக்களையும் முகர முடியும்
போர்களையும் ஜெயிக்க முடியும்.

கவிதையால் அழிந்த சமூகமும் உண்டு
கவிதையே வரலாறான தேசமும் உண்டு

கவிதையால் எழுந்த நாகரிகமும் உண்டு
கவிதைக்குள் சமாதியான சரித்திரமும் உண்டு

கவிதை எழுதுங்கள்

உங்கள் கவிவரிகள்
உரமாகட்டும் நம் எழுச்சிக்கு.
உயிராகட்டும் நம் மாற்றத்துக்கு.
வரமாகட்டும் இளம் சந்ததிக்கு.
வளமாகட்டும் நம் இலக்கியத்துக்கு.

உங்கள் கவிவரிகள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு துப்பாக்கி ரவைகள்.
வெறும் விட்டில்களை இலக்குவைத்து
வீணாக்கி விடாதீர்கள்.

நம்மவரின் அவலங்களை
நாம் வேண்டும் மாற்றங்களை
நாம் வந்த பாதைகளை
நயமாக எழுதிவைப்போம்.


Monday, March 5, 2012

Question on Quran (Tamil)

Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?
A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)
Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது
Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
A) லைலத்துல் கத்ர் இரவில்
Q4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது
A) கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக.
Q5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?
A) இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.
Q6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?
A) மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது
Q7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?
A) அபூபக்கர் (ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில்
Q8) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாக பிரதியெடுக்கப்பட்டது?
A) உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்.
Q9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போது எங்கிருக்கிறது?
A) ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ளது.
Q10) அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?
A) தக்வா (இறையச்சம்) உடையவர்கள்
Q11) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)
Q13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)
Q14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?
A) அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.
Q15) நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன் அருளப்பட்டது?
A) 40 ஆவது வயதில்
Q16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:
A) அல்-ஃபுர்கான், அல்-கிதாப், அத்-திக்ர், அல்-நூர், அல்-ஹூதா
Q17) இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய நபி யார்?
A) முஹம்மது (ஸல்) அத் தவ்பா(9:40)
Q18) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?
A) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அஸ் ஸபா(34:14) மற்றும் அல் ஜின்னு(72:10)
Q19) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?
A) சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)
Q20) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?
A) 114 அத்தியாயங்கள்
Q21) நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?
A) துவா பள்ளத்தாக்கு. அந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில் உள்ளது. (19:52)
Q22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?
A) முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
Q23) நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?
A) முஹம்மது (ஸல்) என நான்கு முறையும், அஹ்மது என ஒரு முறையும் இடம் பெற்றுள்ளது.
Q24) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறையில்லம் எது என குர்ஆன் கூறுகிறது?
A) கஃபா
Q25) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில் இரண்டைக் கூறுக:
A) நூஹ் (அலை) அவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)
Q26) நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது?
A) ஜூதி மலையில் (11:44 )
Q27) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?
A) ஜைத் பின் ஹாரித் (ரலி) அஹ்ஜாப் (33:37)
Q28) ஷைத்தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என குர்ஆன் குறிப்பிடுகிறது?
A) ஜின் இனம்
Q29) இஸ்ராயிலின் வழித்தோன்றல்களுக்கு கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் என குர்ஆன் குறிப்பிடுபவை எவைகளை?
A) தொழுகை மற்றும் ஜக்காத்
Q30) ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது?
A) சூரத்துத் தவ்பா
Q31) ‘பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது?
A) சூரத்துந் நம்ல் -எறும்புகள் (27:30)
Q32) குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?
A) 23 வருடங்கள்
Q33) தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q34) துஆ (பிரார்த்தனை) என குறிப்பிடப்படும் சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q35) திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?
A) அல்-பாத்திஹா
Q36) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு பெண்மணி யார்?
A) மர்யம் (அலை)
Q37) நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன?
A) 6 சூராக்கள் (யூனுஸ், ஹூத், யூசுப், இப்ராஹீம், நூஹ், முஹம்மது (ஸல்))
Q38) ஆயத்துல் குர்ஸி குர்ஆனில் எந்த பாகத்தில், சூராவில் உள்ளது?
A) மூன்றாவாது பாகத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது அத்தியாயத்தின் 255 ஆவது வசனம்.
Q39) அல்-குர்ஆனில் இறைவனின் திருநாமங்களாக எத்தனை பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?
A) 99 பெயர்கள்
Q40) மதினா வேறெந்த பெயரில் குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது?
A) யத்ரிப் (33:13)
Q41) பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது?
A) யாகூப் (அலை) அவர்களின் சந்ததியினர்களை
Q42) ஈமான் கொணடவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெணமணிகள் யாவர்?
A) பிர்அவ்னின் மனைவி (66:11), இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (66:12)
Q43) காபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும் இரு பெண்கள் யாவர்?
A) நூஹ் (அலை) அவாகளின் மனைவி (66:10), லூத் (அலை) அவர்களின் மனைவி (66:10)
அல்லாஹ் நூஹ் நபியின் மனைவியை காபிர் என்று கூறியிருக்க, நம்மவர்கள் திருமண துஆக்களில் நூஹ் நபியின் மனைவி போல் வாழ்க என்று வாழ்த்துகிறார்கள். நூஹ் நபிக்கு பாரிஸா என்று நல்ல மனைவியும் இருந்ததாக இதற்கு ஒரு கடடுக் கதையையும் கூறுகிறார்கள். இது குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரமில்லாத வெறும் யூதக் கடடுக்கதைகளாகும்.
Q44) உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?
A) அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)
Q45) நபி ஈஸா (அலை) அவாகள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள் யாவை?
A) 1) குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் அனுமதியைக் கொண்டு உயிர் கொடுத்தல், 3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல், 4) வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல், 5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல் (5:110), 6) பிறா உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல் (3:49)
Q46) சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?
A) 1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (20:118,119)
Q47) வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?
A) எவரேனும் (பிறர் செய்யும் தீங்கை) பொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிக உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43), (31:17), (3:186)
Q48) நபி முஸா (அலை) அவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள் பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்?
A) பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிடடு எழுந்தது. (2:60) & (7:160)
Q49) தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?
A) ஸகர் என்ற நரகம். அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43)
Q50) இறைவன் என்னோடு இருக்கிறான் என்று கூறிய நபி யார்?
A) முஸா (அலை) அஷ் ஷுஃரா(26:62)