ஹஜ்ஜதுல் விதாஃ
இது ஹி 10 இல் தனது முதலும் இறுதியுமான ஹஜ்ஜின் போது அறபா மைதானத்தில் நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையாகும்.
இவ்வுரையில் முக்கியமாக பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
1. அல்லாஹ்வுக்கு மாத்திரமே அடிமையாக வாழ்தல்
மனிதன் மனிதனையோ அல்லது ஏனைய வஸ்துக்களையோ வணங்கும் இழிநிலையிலிருந்து நீங்க வேண்டும்.
2. மனித சமத்துவம்
அறபி, அஜமியை விடவோ அஜமி அறபியை விடவோ மேலானவர் அல்லர்.
அனைவரும் ஆதமின் பிள்ளைகள். ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர்.
3. அடிமைகளை கண்ணியமாக நடத்தல்
அடிமைத்துவத்தைப் படிப்படியாக ஒழிக்கவேண்டும். அவ் வகையில் உணவு, உடை என்பவற்றையெல்லாம் அவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும்.
4. பழிக்குப் பழி கிடையாது.
பழைய கொலைகளுக்காகப் பழி வாங்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று பிரகடனப்படுத்தியமை. ரபீஆ பின் ஹர்ஸின் மகனின் இரத்தப் பழியை ரத்துச் செய்தமை.
5. வட்டி ரத்துச் செய்யப்பட்டமை.
வறிய மக்களின் இரத்தத்தை உறிஞ்சக் கூடாது. இவ்வகையில அப்பாஸ் இன் வட்டியை முதலில் ரத்துச் செய்தமை.
6. பெண்கள் உரிமை வலியுறுத்தப்படல்.
உங்கள் மீது அவர்களுக்கும் அவர்கள் மீது உங்களுக்கும் உரிமை உண்டு என பெண் உரிமைகளை உறுதி செய்தமை.
7. முஸ்லிம்களின் உயிர், உடமை, மானம் பாதுகாக்கப்படவேண்டும்.
இந்த நாள், மாதம், இடம் எவ்வளவு கண்ணியமோ அதே போன்று முஸ்லிமின் உயிர், உடமை, மானம் பாதுகாக்கப்பட வேண்டும்.
8. குர்ஆன், ஸுன்னாவைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டமை.
உங்களிடம் இரு வியடங்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளும் வரை நீங்கள் வழிதவற மாட்டீர்கள் என குர்ஆனையும் ஸுன்னாவையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டமை.
9. இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யுமாறு பணித்தமை.
இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு இச் செய்தியை எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர்கள் வந்தவர்களை விட அதிகம் உணர்ச்சிபெறக் கூடியவர்களாக இருக்கலாம் என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டமை.
No comments:
Post a Comment