Thursday, March 22, 2012

பத்ர் யுத்தம்



பத்ர் யுத்தம் 

முஸ்லிம்களுக்கும் குறைஷிக் காபிர்களுக்கும் ஹிஜ்றி இரண்டாம் ஆண்டில் ரமழான் 17ம் நாள் நடந்த முதல் போரே பத்ர் யுத்தமாகும். நபி (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட முதல் போராகவும் இது (غزوة ) அமைந்தது. நபி (ஸல்)  அவர்கள் பிரதானமாக 11 யுத்தங்களிலும் மொத்தமாக 26 யுத்தங்களிலும் கலந்துகொண்டுள்ளார்கள்.

யுத்தத்துக்கான காரணிகள் 
• முஸ்லிம்களை வலுக்கட்டாயப்படுத்தியேனும் போருக்குள் நுழைவிப்பதற்கு குறைஷியர் மேற்கொண்ட நடவடிக்கைகள்
     உம்றா செய்ய வருவோரை இம்சித்தல்.
     தோட்டங்களுக்குத் தீ மூட்டல்
     மந்தைகளைக் கொள்ளையடித்தல்.
     மதீனாவில் இருந்த முனாபிக்களைத் தூண்டி முஸ்லிம்களை அங்கிருந்து  
    வெளியேற்ற முயற்சித்தல்
.
மதீனாவுக்குச் சென்ற பிறகும் முஸ்லிம்களை நிம்மதியாக வாழ விடுவதற்கு குறைஷிக் காபிர்கள் விரும்பாமை. (கொலைசெய்தல், இம்சித்தல், சொத்துக்களை அபகரித்தல்) இதனால் எதிர்ப்புணவர்வுகள் வலுப்பெற்றன.

நபி (ஸல்) அவர்களை எப்படியேனும் பலிதீர்க்க வேண்டும் என்ற வெறி குறைஷியரிடம் புரையோடிப்போய்க் கிடந்தமை.

முஸ்லிம்களின் கடவுள் கொள்கை குறைஷியரின் கடவுள் கொள்கையை மிகைத்துவிடும் என்ற பயம் குறைஷியரிடம் இருந்தமை.

குறைஷித் தலைவர்கள் தமது அதிகாரத்தை இழந்துவந்தமை. (அபூ ஸுப்யான், வலீத் பின் முகீரா)

இஸ்லாத்தின் துரிதமாக எழுச்சி கண்டமையும் அது பரவியமையும் காபிர்களிடையே காழ்ப்புணர்வை ஏற்படுத்தியது.
மக்காவின் செல்வாக்கு குறைவடைந்து மதீனாவின் செல்வாக்கும் முக்கியத்துவமும் அதிகரித்தமை.
மதீனாவில் நபி (ஸல்)  அவர்கள் தொடர்ந்து நிலைகொண்டால் மதீனா ஊடாக சிரியா நோக்கிச் செல்லும் மக்கா வியாபாரிகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என காபிர்கள் அஞ்சியமை.
நபி (ஸல்)  அவர்கள் தமது ஆதரவாளர்களுடன் படைதிரட்டி வந்து மக்காவைத் தாக்கலாம் என குறைஷிக் காபிர்கள் கருதியமை.
நபி (ஸல்) அவர்களின் கண்காணிக்குழுவினரின் (ஸரிய்யா) நடவடிக்கைகள்.

இவ்வாறான ஸரிய்யாக்கள் (சிறு படைப்பிரிவுகள்) மக்கா-சிரியா இடையே வியாபாரம் செய்த கள்வர் கோஷ்டிகளை இடைமறித்து அவர்களது பொருட்களைக் கைப்பற்றினர்.
இது குறைஷிக் காபிர்களை எச்சரிப்பதற்காகவும் முஸ்லிம்களைப் பற்றிய பலத்தை மதீனா வாசிகளுக்கு உணர்த்தவுமாய் அமைந்தது.

மக்கா – மதீனா எல்லைப் பகுதியில் நக்லா எனும் இடத்தில் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் தலைமையில் 12 பேர் இதில் ஈடுபடுத்தப்படல். கண்காணிப்புக்காக மாத்திரம் அனுப்பப்பட்ட இக்குழுவினர் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மோதலில் உமர் பின் ஹழ்றமி தலைமையிலான படையினரைத் தாக்கப்பட்டு உமர் பின் ஹழ்ரமி என்ற முஷ்ரிக் கொலைசெய்துவிடல். ரஜப் மாதத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் குறைஷியரின் வெறி உணர்வைத் தூண்டக் காரணமாய் அமைந்தது. எனவே குறைஷியர் போர் ஆயத்தங்களில் ஈடுபட்டனர்.

உடனடிக்காரணமும் முஸ்லிம்களின் ஆயத்தமும்.
ஷாமிலிருந்து மக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த அபூ ஸுப்யானின் வர்த்தகக் குழு வழிமறிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களைப் பணித்தார்கள். குறைஷியரைப் பயமுறுத்தவே அன்றி யுத்தம் செய்யும் நோக்கில் இதனை நபியவர்கள் செய்யவில்லை. அபூ ஸுப்யான் பாதுகாப்புக் கோரி மக்காவுக்குத் தூதனுப்ப இச் செய்தி மிகைப்படுத்தப்பட்டு மக்காவில் பரவியது. அத்துடன் அபூ ஸுப்யானின் குழுவும் தப்பிச் சென்றுவிட்டது. இதன் பின்னர் அபூ ஜஹ்ல் தலைமையில் குறைஷிக் காபிர்கள் முஸ்லிம்களை எதிர்க்க பத்ர் எனும் இடத்தில் தங்கினர். இதனால் முஸ்லிம்கள் இப்படையை எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் இந்த யுத்தத்தில் ஈடுபடுவது குறித்து அன்ஸார்களின் கருத்தையே அதிகம் எதிர்பார்த்தார்கள். அவர்கள் முழுமையாக ஜிஹாத் புரிய ஒத்துழைக்க முன்வந்தார்கள்.

பத்ரில் முகாமிடுவதில் நபி (ஸல்) அவர்கள் ஹப்பாப் இப்னுல் முன்திரின் (ஸல்) ஆலோசனையை ஏற்றார்கள்.

ஸஃத் பின் முஆத் (ரழி) நபி (ஸல்)  அவர்களுக்கு பின்வரிசையில் ஒரு பல்லாக்கு அமைக்கப்படவேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள்.

பத்ர் களமும் ஆள், ஆயுதப் பலமும்

முஸ்லிம்கள்
மொத்தம்: 313 பேர் (207 அன்ஸாரிகள்)
கவசங்கள் : 06
குதிரை வீரர்கள் : 03, குதிரைகள்: 02
ஒட்டகைகள்: 70

குறைஷிக் காபிர்கள்
மொத்தம்: 1000 பேர்
கவசம் அணிந்தோர்: 600 பேர்
குதிரை வீரர்கள் : 100 பேர்
ஒட்டகைகள்: 700

முஸ்லிம்களின் வெற்றிக்கான காரணிகள் 
நபி (ஸல்) அவர்களின் சிறந்த வழிகாட்டலும் தலைமைத்துவமும்.
ஜிஹாத் பற்றிய இஸ்லாத்தின் போதனைகள்
உறுதியான ஈமான்.
       ஈமானோடு போரிடுவோருக்கு நிச்சயம் அல்லாஹ்வின் உதவி கிட்டும்  
       என்ற நம்பிக்கை.
       நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே  
       அவர்களைக் கொன்றான். (குர்ஆன்)
எதிரிகளின் பலவீனம்

பத்ர் வெற்றியின் விளைவுகள் 
மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி ஸ்திரம் அடைந்தமை.
முஹம்மத் (ஸல்) அவர்களின் தலைமைத்துவம் அங்கீகரிக்கப்படல்.
குறைஷியர் மீதமிருந்த கண்ணியம், செல்வாக்கையும் இழக்க நேரிடல்.
முஸ்லிம்களைப் பற்றிய அச்சம் எதிரிகளுக்கு ஏற்பட்டமை.
தொடர்ந்து வந்த வெற்றிகளுக்கும் இது அடிப்படையாக அமைந்தமை.
யுத்த ஒழுக்கங்கள், கனீமத் சட்டங்கள் போன்றவை பற்றிய தெளிவு
        ஏற்படல்.
அல்லாஹ் எப்போதும் முஸ்லிம்களுடன் இருப்பான் என்ற அசைக்க
        முடியாத நம்பிக்கை அவர்களிடம் ஏற்பட்டது.

பத்ர் வெற்றியின் முக்கியத்துவம் 
காபிர்களுக்கு எதிரான முதல் போராட்டமும் முதல் வெற்றியும்.
சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையில் நிகழ்ந்த போhரட்டம்.
        இத்தினத்தை குர்ஆன் யவ்முல் புர்கான் يوم الفرقانஎன அழைக்கின்றது.
இஸ்லாத்தின் எதிர்காலத்தைத் தீர்மானித்த போராட்டம்

பத்ரில் கள உயிரிழப்புக்கள்  
அபூ ஜஹ்ல், வலீத், உத்பா, ஸய்பா, வலீத் போன்ற தலைவர்கள் உட்பட 70
       இற்கும் அதிகமான காபிர்கள்.
முஸ்லிம்களில் 16 பேர் ஷஹீத் ஆயினர்.

No comments:

Post a Comment