Thursday, March 22, 2012

மக்கா வெற்றி



மக்கா வெற்றி
மக்கா மீது முஸ்லிம்கள் படையெடுத்ததற்கான காரணியும் பின்னணியும்

முஸ்லிம்களோடு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்த பனூ குஸாஆக்களை குறைசிக் காபிர்களும் பனூ பக்ர் கூட்டத்தினரும் தாக்கி 20 பேரைக் கொலை செய்ததன் மூலம் ஹுதைபிய்யா உடன்படிக்கையை குறைசிக் காபிர்கள் மீறினர்.  இதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளைப் புறக்கணித்து தாமாகவே உடன்படிக்கையிலிருந்து வெளியேற முன்வந்தமை.

இவ்வுடன்படிக்கை மீறப்பட்டதன் பின்னர் அபூ ஸுப்யான் குறைஷியர் சார்பாக நபி (ஸல்) அவர்களுடன் சமாதானம் பேசுவதற்காக வந்தார். ஆயினும் நபி(ஸல்)  அவர்கள் எந்தவொன்றும் அவருடன் பேசவில்லை. பின்னர் அபூபக்ர் (ரழி)  உமர் (ரழி), அலி (ரழி)  ஆகியோரை அனுகியும் எதுவும் பயனளிக்கவில்லை.

பின்னர் நபி (ஸல்)  அவர்கள் மிக இரகசியமான முறையில் திடீரென தம் படையினருடன் மக்கா நுழையத் திட்டமிட்டார்கள். இச் செய்தியை மக்காவில் இருந்த தம் உறவினர் நலன் கருதி ஹாதிம் இப்னு அபீ பல்தா ஒரு பெண் ஊடாக இந்த இரகசியத்தை எழுதித் தூதாக அனுப்பி வைத்தார். இது வஹி மூலம் நபி (ஸல்)  அவர்களுக்கு உணர்த்தப்பட்டு அது தடுத்து நிறுத்தப்பட்டது. ஹாதிமுக்கு பத்ரில் கலந்து கொண்ட ஒரே காரணத்துக்காக மன்னிப்பு வழங்கப்பட்டது.

பின் திட்டமிட்டபடி நபி (ஸல்) அவர்கள் 10 000 பேருடன் மக்கா நோக்கிப் படையெடுத்துச் சென்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் அபூ ஸுப்யான் (ஸல்)இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். பின் நபி(ஸல்) அவர்கள் அபூ ஸுப்யானின் வீட்டிலோ அல்லது தத்தமது வீடுகளிலோ அல்லது கஃபாவிலோ தஞ்சம் புகுந்தவர்கள் பாதுகாப்புப் பெற்றுவிட்டார் எனப் பிரகடனம் செய்தார்கள். இப்பிரகடனத்தை அபூ ஸுப்யான் (ரழி) குறைசியரிடம் போய் அறிவித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் நுழைந்தார்கள். எவரும் எதிர்த்துப் போராட முன்வராததால் இரத்தம் சிந்தாமலேயே மக்கா முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. பின் கஃபாவில் இருந்த சிலைகளை நபி(ஸல்) அவர்கள் உடைத்தெரிந்தார்கள். பிலால் (ரழி) அவர்கள் தொழுகைக்காக அதான் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கினார்கள். அப்துல் உஸ்ஸா, இக்ரிமா பின் அபீ ஜஹ்ல் போன்ற ஒரு சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் படையைக் குறைசியர் எதிர்கொண்ட விதம் 
குறைசியர் தம் நகர எல்லையில் முஸ்லிம் வீரர்களை எதிர்பாராத விதமாக எதிர்கொண்டமை.
இந் நிலையில் முஸ்லிம்களோடு போரிடுகின்ற சக்தி குறைசியரின் காணப்படாமை.
இக்ரிமா. ஸப்வான், ஸுஹைல் தலைமையிலான குறைசியரின் எதிர்ப்புக்களும் காலித் பின் வலீத் (ரழி) தலைமையிலான முஸ்லிம் படை தாக்கப்பட்டமையும்.

மக்கா வெற்றியின் பின்னர் குறைசிகளை நபி (ஸல்) அவர்கள் எதிர்கொண்ட விதம்
தம் சகோதரர்களாக மதித்து அவர்களை விடுதலை செய்தமை

கடும் எதிரிகள் சிலருக்கு மரண தண்டனை வழங்கியமை. அவர்களில் சிலருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டமை.

ஹிஜ்றத்தின் போது விட்டுச் சென்ற பின் பெற்றுக்கொண்ட மக்காவாசிகளின் சொத்துக்களை மீளப் பெறாமை.

மக்கா வெற்றியின் விளைவுகள்
கஃபா சிலைவணக்கத்திலிருந்தும் தூய்மையாக்கப்பட்டமை. தௌஹீத் கோட்பாடு நிலைபெற்றமை.

மக்காவாசிகள் பலரும் மக்காவைச் சூழவிருந்த பல கோத்திரங்களும் இஸ்லாத்தை ஏற்றமை.

ஹுனைன் கோத்திரத்தை வெற்றி கொள்ள வாய்ப்புக் கிடைத்தமை

அறேபியர் நபி(ஸல்) தலைமையில் ஐக்கியப்பட்டமை.

No comments:

Post a Comment